world

img

பாகிஸ்தாn தேர்தல் மொபைல் சேவைகள் நிறுத்தம்!

பாகிஸ்தானில் இன்று பொதுத்தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், மொபைல் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் பொதுத்தேர்தல் இன்று நடைபெறுவதையடுத்து புதிய நிர்வாகத்தைத் தேர்ந்தெடுப்பதற்காக மக்கள் வாக்களிக்கும்போது எந்தவித பிரச்சனையும் ஏற்படாத நிலையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். 
இந்த நிலையில், நாடு முழுவதும் மொபைல் சேவைகளைத் தற்காலிகமாக நிறுத்த முடிவு செய்துள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 
இன்று காலை 8 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை இடைவேளையின்றி நடைபெறுகிறது. மொத்தம் 128,585,760 பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் வாக்களிக்க நாடு முழுவதும் இன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 
கராச்சி, பெஷாவர் உள்ளிட்ட சில நகரங்களில் தொலைப்பேசி சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.