பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 2 வாரம் ஜாமீன் வழங்கியது இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம்.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கல்வி நிறுவன அறக்கட்டளை மோசடி தொடர்பான வழக்கு விசாரணையில் ஆஜராக இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் வந்தபோது அவர் கைது செய்யப்பட்டார். இம்ரான்கான் கைது செய்யப்பட்டதை அடுத்து அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ரகசிய இடத்தில் வைத்து இம்ரான் கானிடம் என்ஏபி அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதன் பின்னர், காவல் தலைமையகத்தில் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தினர்.
இதற்கிடையில், இம்ரான் கானின் கைது சட்ட விரோதமானது என்றும், அவர் விடுதலை செய்யப்பட வேண்டும் என்றும் ஊழல் தடுப்பு அமைப்புக்கு உத்தரவிட்டுள்ளது. இதனை தொடர்ந்து, இம்ரான் கானுக்கு 2 வாரம் ஜாமீன் வழங்கியது இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம். மேலும், மே 17 வரை எந்த புதிய வழக்கிலும் இம்ரான் கானை கைது செய்யக்கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.