பாகிஸ்தானின் குஜ்ரன்வாலாவில் வேனும் டிரக்கும் மோதிய விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர். 8 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
பாகிஸ்தானின் சர்கோதாவில் உள்ள ஒரு கோவிலுக்கு சென்றுவிட்டு குஜ்ரன்வாலா நோக்கி பயணிகளை ஏற்றிக்கொண்டு வேன் ஒன்று வெள்ளிக்கிழமை சென்றுள்ளது. அப்போது குஜ்ரன்வாலாவின் கோட் லதா பகுதிக்கு அருகிலுள்ள ஹபிசாபாத் சாலையில் சென்று கொண்டிருந்தபோது அவ்வழியே வேகமாக வந்த டிப்பர் லாரி, வேன் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 8 பேர் படுகாயமடைந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். தொடர்ந்து காயமடைந்தவர்களை மீட்டு ஹபிசாபாத் மற்றும் குஜ்ரன்வாலா மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
முதற்கட்ட விசாரணையில், வேகமாக வந்த டிப்பர் லாரியும் வேனும் ஒன்றன்பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்ளானது தெரிய வந்தது. மேலும் விபத்து நடந்தவுடன் டிப்பர் லாரி ஓட்டுநர் தப்பிச் சென்றுள்ளார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.