world

img

பாகிஸ்தானில் ஒவ்வொரு ஆண்டும் 1000 பெண்கள் ஆணவப்படுகொலை செய்யப்படுவதாக மனித உரிமைகள் ஆணையம் தகவல்…!  

பாகிஸ்தானில் கடந்த ஆண்டு 478 ஆணவப்படுகொலைகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் மனித உரிமைகள் ஆணையம் சமீபத்தில் வெளியிட்ட வருடாந்திர அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலும் கெளரவத்தின் பெயரால் செய்யப்படும் கொலைகளின் எண்ணிக்கை அதிகம் என்றும் ஒவ்வொரு வழக்கும் காவல்துறையில் பதிவு செய்யப்படுவதில்லை என்றும் பெண்கள் உரிமைக்காக பணியாற்றும் அமைப்புகள் கூறுகின்றன.  

பாகிஸ்தானில் ஆணவப்படுகொலை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த ஆணவப்படுகொலை வழக்குகளில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்தான் அதிகம் சம்பந்தப்பட்டவர்களாக உள்ளனர்.

இதையடுத்து இன்றும் கூட பாகிஸ்தானில் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் பணிபுரிவது மற்றும் மாடலிங் செய்வது போன்றவை ஆணவப்படுகொலைக்கு காரணங்களாக அமைக்கின்றது.

அந்த வகையில் சித்ரா காலித்தைப் போலவே மாடல் கந்தீல் பலூச், 2016இல் தனது சகோதரர் வாசிம் கானால் கழுத்தை நெரித்து படுகொலை செய்யப்பட்டார். கந்தீல் பலூச் என்பவர் சமூக வலைத்தளங்களில் பிரபலமானவர்.  

கந்தீல் பலூச் ஆணவப்படுகொலைக்கு பிறகு, உயிரிழந்தவரின் குடும்பத்தினர் அவரை மன்னித்தாலும்கூட, குற்றம் சாட்டப்பட்டவர்கள் தண்டனையிலிருந்து தப்ப முடியாது என்ற புதிய சட்டத்தைக் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் இரு அவைகளாலும் நிறைவேற்றப்பட்டது.