புதுதில்லி, ஜன.16- நேபாளத்தில் விபத்துக்குள்ளாகி 72 பேரை பலிகொண்ட பயணிகள் விமா னத்தின் கருப்புப் பெட்டி கண்டெ டுக்கப்பட்டுள்ளது. விபத்துக்குள்ளான எட்டி ஏர்லைன்ஸ் ஏடிஆர் 72 விமானத்தின் தகவல் பதிவுகள் (டேட்டா ரெக்கார்டர்) மற்றும் காக்பிட் குரல் ரெக்கார்டர் ஆகி யவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 72 பேரும் உயிரிழந்தது உறுதி செய்யப் பட்டுள்ளது. தலைநகர் காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் விமான நிலையத்தில் இருந்து பகல் 10.33 மணிக்கு எட்டி ஏர்லைன்ஸ் விமா னம் ஏடிஆர் 72 புறப்பட்டது. 15 நாட் களுக்கு முன்பு திறக்கப்பட்ட போக்ரா சர்வதேச விமான நிலையத்தில் தரை யிறங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன் விமானம் விபத்துக்குள்ளானது. அந்த விமானம் சேதி ஆற்றின் அருகே உள்ள பள்ளத்தாக்கில் விழுந்து நொறுங்கியது. அப்போது விமானத்தில் தீப்பிடித்தது. விமானத்தை தரையிறக்க அனுமதித்த பிறகு தொடர்பு துண்டிக்கப்பட்டதாக விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு வட்டாரங்கள் தெரிவித்தன. இதை யடுத்து, விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது.
விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய 5 பேர் கொண்ட விசாரணைக் குழுவை அரசு நியமித்தது. அபிஷேக் குஷ்வாஹா, பிஷால் சர்மா, அனில் குமார் ராஜ்பார், சோனு ஜெய்ஸ்வால் மற்றும் சஞ்சய் ஜெய்ஸ்வால் ஆகியோர் விமானத்தில் இருந்த இந்தியர்கள். நான்கு ரஷ்யர்கள், இரண்டு தென் கொரி யர்கள் மற்றும் அர்ஜெண்டினா, அயர்லாந்து, ஆஸ்திரேலியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த தலா ஒருவர் விமானத்தில் இருந்தனர். மூன்று பச்சிளம் குழந்தைகளும் மூன்று சிறார் களும் விமானத்தில் இருந்தனர். நான்கு ஊழியர்களில், இருவர் விமானிகள். இருவர் விமானப் பணிப்பெண்கள். பிரதமர் புஷ்ப கமல் தஹால் அவசர அமைச்சரவை கூட்டத்தை கூட்டி மீட்பு பணிகளை தீவிரப்படுத்த உத்தரவிட்டார். ஜனவரி 16 திங்களன்று அதிகாரப்பூர்வ துக்கம் அனுசரிக்கப்பட்டது. பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் ரபி லாமிச்சன் ஆகியோர் விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டனர். நேபாளத்தில் கடந்த 30 ஆண்டுகளில் நடந்த மிகப் பெரிய விமான விபத்து இதுவாகும். 1992ஆம் ஆண்டு காத்மாண்டு அருகே விமானம் விபத்துக்குள்ளானதில் 167 பேர் உயிரிழந்தனர்.
விபத்தில் இறந்த உத்தரப்பிரதேச இளை ஞர்களின் செல்பேசிகளில் இருந்து துயரத்தின் கடைசி நிமிட காட்சிகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. உத்தரப்பிர தேச மாநிலம் காசிப்பூரைச் சேர்ந்த நான்கு இளைஞர்கள் வெள்ளியன்று சுற்றுலாவுக்காக நேபாளம் சென்றனர். காத்மாண்டுவில் உள்ள புகழ்பெற்ற பசுபதிநாத் கோயிலுக்குச் சென்றுவிட்டு, பாரா கிளைடிங்கிற்காக போக்ராவுக்குத் திரும்பிக்கொண்டிருந்தனர். போக்ராவில் விமானம் தரையிறங்கியதும், செல்பேசி யில் பேஸ்புக் லைவ் கொடுத்துக் கொண்டி ருந்தனர். விபத்து நடந்த இடத்தில் அதிர்ச்சியூட்டும் காட்சிகளுடன் அந்த செல்பேசி கண்டெடுக்கப்பட்டுள்ளது.