நேபாளத்தில் ஜீப் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய-மேற்கு நேபாளத்தில் பியூதான் மாவட்டத்தில் இன்று அதிகாலை 3 மணியளவில் திருமண விழாவிற்குச் சென்ற ஜீப் வளைவில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 5 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
மேலும் விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.