நியூயார்க், ஜூலை 31- கியூபாவை பயங்கரவாதத்தை ஆதரித்து ஊக்குவிக்கும் நாடுகளின் பட்டியலில் இருந்து அமெரிக்கா நீக்க வேண்டும் என்று ஐ.நா. அவையின் சுயா தீன நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அதேபோல பொருளாதாரத் தடைகள் நிதி முற்றுகையையும் திரும்பப்பெற வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.
கியூபப் புரட்சியை முறியடித்து அந்நாட்டை அமெரிக்காவின் காலனி யாக மாற்றுவதற்காக அமெரிக்க அரசு பல ஆண்டுகளாக முயற்சி செய்து வரு கிறது. இதற்காக பல்வேறு வகையிலான பொருளாதாரத் தடைகள், முடக்கங்களை கியூபா மீது திணித்துள்ளது.
பொருளாதாரத் தடைகள் மூலம் கியூ பாவை கடுமையான நிதி நெருக்கடிக்குத் தள்ளி அந்நாட்டின் வளர்ச்சிக்கான அறி வியல் தொழில் நுட்பம், உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாடு ஆகியவற்றில் முழு மையான மற்றும் சீரான முன்னேற் றத்தை அடைந்து விடாமல் அமெரிக்கா முட்டுக்கட்டை போட்டு வருகிறது. கியூபா பயங்கரவாதத்தை ஆத ரிக்கும் நாடு என ஒரு தலைப்பட்சமாக சித்தரிப்பது சர்வதேச சட்டத்தின் அடிப்ப டைக் கொள்கைகளுக்கு முரணான செயல் என்று சுயாதீன நிபுணர்களின் ஐ.நா. குழு தெரிவித்துள்ளது.
அதிக மருத்துவர்களுடன் சுகாதாரத் துறையில் சிறந்த வளர்ச்சி பெற்றுள்ள கியூபாவில் அமெரிக்காவின் தடைகளால் மருந்து மற்றும் மருத்துவ உபகரணங் கள் பற்றாக்குறை உருவாகி வருகிறது. ஐ.நா. பாதுகாப்பு அவையில் கியூபா விற்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள பொரு ளாதாரத் தடைகளை நீக்க வேண்டும் என கொண்டுவரப்பட்ட தீர்மானங்கள் அனைத்தையும் அமெரிக்கா தனது ரத்து ( வீட்டோ ) அதிகாரத்தின் மூலம் நீக்கியுள்ளது. இந்நிலையில் ஐ.நா. அவையின் சுயா தீன நிபுணர்கள், அமெரிக்க அரசு அனை த்து சர்வதேச மனித உரிமைகள் கடமை களை கடைப்பிடித்து நடக்க வேண்டும் என்றும் கியூபா மீதான தடைகளையும் பொருளாதார முற்றுகைகளையும் முடி வுக்கு கொண்டுவர விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் வலியுறுத்தி யுள்ளனர்.