நியூயார்க், ஜூலை 18 - பாலஸ்தீனத்தின் காசா பகுதி மீது இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் தாக்குதலை உடனடியாகவும் முழுமையாகவும் நிறுத்த வேண்டும் என இந்தியா வலியுறுத்தியுள்ளது.
ஐக்கிய நாடுகள் அவையின் பாதுகாப்புக் கவுன்சில் கூட்டத்தில் இந்தியாவின் துணைப் பிரதிநிதியான ஆர். ரவீந்திரா இந்தியாவின் சார்பில் உரையாற்றினார். அப்போது அவர் கூறியிருப்பதாவது:
பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காணப்பட வேண்டும்
பாலஸ்தீன வளர்ச்சிக்கு கடந்த பல ஆண்டுகளாக இந்தியா உதவி செய்து வருகிறது. இதுவரை 12 கோடி டாலர்கள் அளவிற்கு இந்தியா பாலஸ்தீனத்திற்கு உதவி செய்துள் ளது. இதில், பாலஸ்தீன அகதிகளுக் கான அமைப்பிற்கு கொடுத்த 3.5 கோடி டாலர் நிதியும் அடங்கும். இவ்வ மைப்பிற்கு 2018 முதல் 50 லட்சம் டாலர்களை இந்தியா ஆண்டுதோறும் வழங்கி வருகிறது.
2023 அக்டோபர் மாதம் இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதலை துவங்கிய போது இந்திய அரசு அதனை உறுதி யாக கண்டித்தது. இந்தப் போரை நிறுத்த வேண்டும் என்று எப்போ துமே வலியுறுத்தி வருகிறோம். அமை தியான பேச்சு வார்த்தையில் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்பதுதான் இந்தியாவின் நிலைப் பாடு.
‘இரு நாடுகள்’ கோட்பாடே இந்தியாவின் நிலைப்பாடு
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமைதி மற்றும் நிலைத்தன்மைக்காக இந்தியா நின்று வருகிறது. பரஸ்பர மாக ஒப்புக்கொள்ளப்பட்டு அங்கீ கரிக்கப்பட்ட எல்லைகளுக்குள் அமை தியுடன் வாழும் பாலஸ்தீனத்தின் சுதந்திரம், இறையாண்மையைக் கொண்ட சுதந்திரமான பாலஸ்தீன த்தை உள்ளடக்கிய ‘இரு நாடுகள்’ என்ற தீர்வை நாங்கள் ஆதரிக்கி றோம். இது இந்தியாவின் நீண்டகால நிலைப்பாடு.
அதன்படி காசாவில் போரை உடனடியாகவும், முழுமையாகவும் நிறுத்த வேண்டும். மனிதாபிமான உத விகள் காசாவிற்குள் எந்தத் தடையும் இன்றி பாலஸ்தீன மக்களுக்கு செல்ல வேண்டும். ஹமாஸ் அமைப்பும் எவ்வித நிபந்தனையுமின்றி பணயக்கைதிகளை விடுவிக்க வேண் டும் என இந்தியா மீண்டும் வலியுறுத்து கிறது.
மேற்காசிய நாடுகளில் நீடித்த அமைதி வேண்டும்
மேற்காசிய நாடுகளில் நீடித்த அமைதி மற்றும் நிலைத்தன்மையை கொண்டு வருவதில் உறுதியான நம்பிக்கையுடன் அந்நாடுகளுடன் தனது உறவைத் தொடர இந்தியா தயாராக உள்ளது.
இவ்வாறு ஐ.நா.வுக்கான இந்தியா வின் துணைப்பிரதிநிதி ஆர். ரவீந்திரா பேசியுள்ளார்.
இஸ்ரேலுக்கு ஆயுதம்
சர்வதேச அரங்கத்தில் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக பேசும் இந்திய அரசு, மறுபுறத்தில் இஸ்ரேலின் இனப்படுகொலை தாக்குதல்களுக்கு தேவையான ஆயுத பாகங்களையும், துப்பாக்கிக் குண்டுகளையும், ஏவு கணைக்கான பாகங்களையும், ஆளில்லா விமானங்களையும், இந்திய துறைமுகங்கள் வழியாக அனுப்ப அனுமதித்து வருவது குறிப்பிடத்தக்கது.