ஒமிக்ரானின் உருமாறிய புதிய வகை தொற்றான பிஏ.2 கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து உலக சுகாதார நிறுவனத்தின் தொழில்நுட்ப பிரிவின் தலைவர் மரியா வான் கெர்க்கோவ் கூறுகையில், பிஏ.2 ஒமிக்ரானின் உருமாறிய புதிய வகை தொற்றான பிஏ.2, தற்போது பரவி வரும் பிஏ.1 ஒமிக்ரான் தொற்றை காட்டிலும் அதிக பாதிப்பை ஏற்படுத்தலாம். பிஏ.1 வகை ஒமைக்ரானை விடவும், பிஏ.2 தொற்று அதிகம் பரவும் திறன் கொண்டதாக இருக்கிறது.
இதனால், உலகம் முழுவதும் கொரோனா கண்டறியும் அளவு அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் தற்போது கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் நாடுகளில் உலக சுகாதார நிறுவனம் மிகவும் கூர்மையாக கவனித்து வருகிறது என்றும் தெரிவித்துள்ளார்.
அதனைதொடர்ந்து ஒமிக்ரான் பாதித்தவர்களுக்கு இந்த புதிய வகை ஒமிக்ரான் தொற்று பாதிப்பை ஏற்படுத்துமா என்பது குறித்து தெளிவான விளக்கம் ஏதுமில்லை எனவும் தெரிவித்துள்ளார்.