கார்டூம்,ஆக.20- சூடான் உள்நாட்டுப் போரில் பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகள் அதிகரித்துள்ளன என சூடான் கம்யூனிஸ்ட் கட்சி, பெண்கள் அமைப்பு உள்ளிட்டவை குற்றம் சாட்டி யுள்ளன.
சூடானின் ராணுவம் மற்றும் அதிவிரைவுப் படை ஆகியவற்றிற்கு இடையே நீடித்து வந்த அதிகாரப் போட்டி 2023 ஆம் ஆண்டு உள்நாட்டுப் போராக வெடித்தது. இதனால் 2 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் எகிப்து உள்ளிட்ட நாடுகளில் அகதிகளாகத் தஞ்சம் புகுந்துள்ளனர். மேலும் லட்சக்கணக்கான மக்கள் உள்நாட்டில் அகதி களாக உள்ளனர்.
சூடானின் ராணுவம் மற்றும் அதிவிரைவுப் படை ஆகியவற்றிற்கு இடையே நீடித்து வந்த அதிகாரப் போட்டி 2023 ஆம் ஆண்டு உள்நாட்டுப் போராக வெடித்தது. இதனால் 2 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் எகிப்து உள்ளிட்ட நாடுகளில் அகதிகளாகத் தஞ்சம் புகுந்துள்ளனர். மேலும் லட்சக்கணக்கான மக்கள் உள்நாட்டில் அகதி களாக உள்ளனர்.
உள்நாட்டுப் பெண்கள், குழந்தைகள், முதி யவர்கள் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி யுள்ளது. இரு தரப்பினராலும் பாலியல் வன் முறைக்கு ஆளாகியிருப்பதாக நூற்றுக்கணக்கா னப் பெண்கள் புகார் அளித்துள்ளனர்.
உள்நாட்டு போர் துவங்கிய பிறகு சூடான் சிவில் சமூக அமைப்புகள் கிட்டத்தட்ட 423 பாலியல் வன்கொடுமை வழக்குகளை ஆவணப்படுத்தியுள் ளன. அதில் 159 பேர் (37 சதவீதம்) குழந்தைகள் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இது பாதிக்கப்பட்ட மக்களில் வழக்குப் பதிவு செய்த சொற்ப எண்ணிக்கை மட்டும் தான் எனவும் வழக்குப் பதிவு செய்யாமலும், வழக்குப் பதிவு செய்வ தில் இருந்து ஆயுதப்படைகளால் தடுக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கையை கணக்கிட்டால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. உண்மையில் ஆயுதப்படைக ளால் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டவர்களின் எண் ணிக்கை இதனை விட அதிகமாக இருக்கலாம் என சூடான் கம்யூனிஸ்ட் கட்சி , பெண்கள் அமைப்பு உள்ளிட்டவை குற்றம் சாட்டியுள்ளன.
பாலியல் வன்முறைகளுக்கு ஆளானவர்க ளில் சிலர், தங்கள் குடும்பங்களில் இருந்து வரும் எதிர்மறை சமூக இழிவுகளால் தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
அரசு நிறுவனங்கள் முற்றிலும் முடங்கி இருப்ப தால் பல்வேறு வழக்குகளை பதிவு செய்வதிலும், தரவுகளை முழுமையாகச் சேகரிப்பதிலும் பிரச்ச னைகள் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சூடான் பெண்கள் மட்டுமல்லாது, பெண் பத்திரி கையாளர்களும் பல்வேறு வன்முறைகளை எதிர்கொண்டு வருகின்றனர் எனவும் தெரிவிக் கப்பட்டுள்ளது.