world

img

உள்நாட்டுப் போரால் விவசாயிகள் உயிரிழப்பு : சூடானில் தீவிரமாகும் பஞ்சம்

கார்டூம்,மார்ச் 13-  சூடான் நாட்டின் அதிகாரப் போட்டியில் ஈடுபட்டிருக்கும் துணை ராணுவ அதிரடி படைகளுக்கும், அந்நாட்டு ஆயுதப்படைகளுக்கும் இடையே உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது.  இந்தப் போரில் கிராமங்களைச் சூறையாடுவது, விவசாயிகளை கொலை செய்வது, சேமிப்புக் கிடங்கு களில் உள்ள உணவு தானியங்கள், மாவுகளை கொள்ளையடிப்பது என துணை ராணுவ அதிரடிப் படைகள் பயங்கர அட்டூழியங்களை செய்து வருகின்றன. இதனால் நாடு முழு வதும் உருவாகியுள்ள பஞ்சம் மேலும் தீவிரமான நிலைக்கு செல்கிறது.  துணை ராணுவ அதிரடிப் படை களின் கட்டுப்பாட்டில் பாலைவனப் பகுதியாக உள்ள டார்ஃபூர் என்ற  பகுதியில்  ஒவ்வொரு நாளும் உண வின்றி குழந்தைகள் உட்பட பலர் மரணமடைந்து கொண்டுள்ளனர். அதே வேளையில், அந்நாட்டு கிழக்குப் பகுதியில் விவசாயப் பகுதிகளாக உள்ள கிராமப்பகுதிக ளில் அப்படை பிரிவு தாக்குதல் நடத்தி பல விவசாயிகளை படுகொலை செய்துள்ளது.   உள்நாட்டுப் போரில் அரங்கேற் றப்படும் பல மனித தன்மையற்ற குற்றங் கள் வெளியுலகத்திற்கு சென்று விடாமல் இருக்க அந்நாட்டில் இணைய முடக்கமும் அமல்படுத்தப் பட்டுள்ளது. இந்நிலையில் ஒவ்வொரு நாளும் பல கிராமங்கள் மீது துணை  ராணுவ அதிரடி படை தாக்குதல் நடத்தி வருகிறது. அக்கிராமங்களின் மீது தாக்குதல் நடத்தாமல் இருக்க கிராமங்களில் உள்ள உணவு தானி யங்கள், விலங்குகளை கொள்ளைய டித்துச் செல்கின்றன. பல கிராமங்க ளில் உள்ள இளைஞர்களை தங்கள் படைகளை பணியாற்ற கடத்திச் செல்வதாகவும் கூறப்பட்டுள்ளது.  இவற்றை எதிர்க்கும் கிராம மக்களை கொலை செய்வதுடன் அக் கிராமத்தையே ஒட்டுமொத்தமாகச் சூறையாடி  விவசாய நிலங்களை யும் பயிர்களையும் அழித்து சேமித்து  வைத்துள்ள உணவுப் பொருட்களை யும் ஆயுதப்படைகள் திருடி வரும் நிலையில் பஞ்சமும் வறுமையும் அதிகரித்து வருகிறது. இந்த சூழலால் ஆயிரக்கணக் கான மக்கள் இடம் பெயர்ந்து முகாம்க ளில் தங்கியுள்ளனர்.முகாம்களை விட்டு வெளியேறினால் மீண்டும் உயிருடன் திரும்ப இயலாது என்ற பயங்கரமான சூழல் நிலவுகிறது. இதனால்  விவசாயி கள் குறைந்த பட்ச தேவைக்கு கூட உணவு உற்பத்தி செய்து கொள்ள இய லாத சூழலில் தள்ளப்பட்டுள்ளனர். மற்றொரு புறம் பாதிக்கப் பட்டுள்ள மக்களுக்கு உணவுப் பொ ருட்கள் கொடுக்க ஐநா அமைப்பால் உணவு கொண்டுவரப்படும் வாக னங்களையும் அப்படைகள் தாக்கு தல் நடத்தி திருடி வருகின்றன. இத னால் உணவு அனுப்புவதை ஐநா அமைப்பு தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.