world

img

சீனாவுக்கான ஏற்றுமதியை அதிகரிக்கும் வியட்நாம்

ஹனோய், மார்ச்.1- சீனா அரசு வியட்நாமின் விவசாய, பண் ணைப் பொருட்கள் அனைத்தையும் அனு மதிக்கும் வகையிலான விதிமுறைகளை மறுபரி சீலனை செய்ய ஒப்புக்கொண்டதன் மூலம் இந்த ஆண்டு சீனாவுக்கான ஏற்றுமதியை வியட்நாம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  பறவைக் காய்ச்சல் உள்ளிட்ட நோய் தொற்றின் காரணமாக வியட்நாமில் இருந்து கோழி இறைச்சி உள்ளிட்ட பொருட்கள் இறக்கு மதிக்கு சீனா தடை விதித்திருந்தது.   இந்நிலையில் வியட்நாமின் விவசாயம் மற்றும் கிராமப்புற மேம்பாட்டுத் துறை துணை அமைச்சர் டிரான் தான் நாம், கடந்த மாதம் சென்றிருந்த ஐந்து நாள் சீனப் பயணத்தின் போது வியட்நாமில் இருந்து கோழி இறக்கு மதி செய்ய சீனா விதித்திருந்த தடையை நீக்கு வது குறித்து பரிசீலிக்க பேச்சுவார்த்தை நடத்தி  இருந்தார்.   சீன அரசு அதை ஏற்றுக்கொண்ட நிலை யில் இருநாட்டுக்கும் இடையே வர்த்தக ஒப்பந்தம் மேம்பாடு அடைந்துள்ளது.    2016 ஆம் ஆண்டு முதல் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பில் சீனாவின் மிகப் பெரிய மற்றும் நெருங்கிய வர்த்தக நாடாக வியட்நாம் இருந்து வருகிறது. 2023 ஆம் ஆண்டின் முதல் 11 மாதங்களில் சீனாவின் மொத்த வர்த்தகத்தில் 25 சதவீதமான வர்த்தகம் சீனா மற்றும் வியட்நாமுக்கு இடையே நடந்துள்ளது.   2023 ஆம் ஆண்டு முதல் 11 மாதங்களில் மட்டும் சீனா 620 கோடி டாலர் மதிப்பிற்கு வியட்நா மில் இருந்து விவசாயப் பொருட்களை இறக்கு மதி செய்துள்ளது.  இது ஆண்டுக்கு ஆண்டு 20.3 சதவீதம் வரை அதிகரித்து வந்ததாக  சீன ஊடகங்களே தெரிவித்துள்ளன. எனினும் சீனாவில் ஆண்டுதோறும் சுமார் 40 கோடி டாலர்கள் அளவிற்கு மக்கள் இறைச்சியை உண வில் சேர்த்து வருகிறார்கள். இதனால்  வியட்நாம் அரசு  தனது உற்பத்திப் பொருட்களை விற்பனை  செய்ய நல்ல  சந்தையாக சீனாவை கருது கிறது.  2023 ஆம் ஆண்டு வியட்நாமில் இருந்து  சீனாவிற்கு 1,220 கோடி மதிப்பில் விவசாய, பண்ணை மற்றும் கடல் உணவுப் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. இதில் பண்ணைப் (கால்நடை) பொருட்கள் 1 சதவீதம் மட்டுமே. பறவைக் காய்ச்சல் பரவலால் இறைச்சிகளுக்கு சீனா விதித்திருந்த இறக்குமதி கட்டுப்பாடுக ளால் குறைந்த அளவே வியட்நாம் ஏற்றுமதி செய்துள்ளது.  சந்தைகளை விரிவுபடுத்தும் வகையில் சீனாவுடன் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தங்களினால் வியட்நாமில்   இருந்து அதிகளவிலான இறைச்சி, பழங்கள் உள்ளிட்ட விவசாய உணவுப் பொருட்களை சீனாவிற்கு ஏற்றுமதி செய்ய முடியும். இதன் மூலம் தங்கள் நாட்டின் விவசாயிகள் பலனடைவதோடு பொருளாதார முன்னேற்றத்திற்கும் முக்கியப் பங்கு வகிக்கும் என அந்நாட்டு ஏற்றுமதி நிறுவனங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன.