புதுதில்லி,நவ.22- பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் நடத்தி வரும் போரால் உலகம் முழுவதும் போர்ப் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், அது குறித்து விவா திக்க பிரிக்ஸ் நாடுகளின் இணைய வழி கூட்டம் செவ்வாய்க்கிழமை நடை பெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் உடனடி யான போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தார். வளர்ந்து வரும் பொருளாதாரக் கூட்டமைப்பான பிரிக்ஸ் அமைப்பின் இணையவழி கூட்டம் இந்தாண்டுக் கான தலைமை வகித்து வரும் தென்னாப்பிரிக்க ஜனாதிபதி சிரில் ரமபோசா தலைமையில் செவ்வாய்க்கிழமையன்று மாலை 6.30 மணிக்கு நடைபெற்றது.உறுப்பு நாடுகளின் தலைவர்கள் அனைவரும் பங்கேற்ற இக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கவில்லை, இந்தியா சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்றார். கூட்டத்தில் பேசிய போது, இஸ்ரேல்-பாலஸ்தீன போரில் ஈடு பட்டுள்ள அனைத்து தரப்பினரும் உடனடியாக போர்நிறுத்தம் செய்ய வேண்டும் என அழைப்பு விடுத்த சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், மனிதாபிமான நிவாரணப் பொருட் களை கொண்டு செல்ல பாதுகாப்பான பாதை தரப்பட வேண்டும் என்றும் காசா பகுதியில் இருந்து பாலஸ்தீன குடிமக்களை கட்டாயமாக வெளி யேற்றுவதை முடிவுகட்டவும் வலி யுறுத்தினார். மேலும் இஸ்ரேலின் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ள பாலஸ்தீன பகுதியில் தண்ணீர், எரி சக்தி மற்றும் மின்சாரம் ஆகியவை மீண்டும் தரப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இரு நாடு தீர்வு
நீண்டகாலமாக நீடித்து வரும் இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வர ஒரே வழி இரு நாடு தீர்வை நடைமுறைப் படுத்துவதும், “பாலஸ்தீனத்தின் நியாயமான உரிமைகளை மீட்டெடு ப்பதும்” இறையாண்மையும் சுதந்திர மும் கொண்ட சுதந்திர பாலஸ்தீன த்தை நிறுவுவது மட்டுமே என்று சீன ஜனாதிபதி தெரிவித்தார். பாலஸ்தீனப் பிரச்சனைக்கு நியாயமான தீர்வு இல்லாமல், மேற்கு ஆசியாவில் நிரந்தர அமைதியும் உறுதித்தன்மை யையும் நிலைநாட்ட முடியாது எனவும் அவர் எச்சரித்தார். “பாலஸ்தீனர்கள் மீது நடத்தப் பட்டு வரும் அனைத்து வன்முறை களையும் பாலஸ்தீன மக்களைக் குறி வைத்து நடத்தப்பட்டு வரும் தாக்கு தல்களை நிறுத்தவும், மேலும் பல உயி ரிழப்புகளைத் தடுக்க பணயக்கைதி களை விடுவிக்கவும்” போரில் ஈடு பட்டுள்ள அனைத்து தரப்பினரையும் ஜின்பிங் வலியுறுத்தினார்.
நேரடிப்பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் : இந்தியா
இந்த பிரிக்ஸ்-பிளஸ் குழுவின் இணைய வழிக்கூட்டத்தில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொண்டு, காசாவின் தற்போதைய நிலைமை குறித்து இந்தியாவின் கவலையை வெளிப்படுத்தினார் மற்றும் இஸ்ரேல் -பாலஸ்தீன அதிகாரிகளுக்கிடையே “நேரடியான அர்த்தமுள்ள பேச்சு வார்த்தைக்கு” அழைப்பு விடுத்தார். மேலும் பேசிய அவர் “காசாவில் நடந்து வரும் இஸ்ரேல்-பாலஸ்தீன போர் , பொதுமக்கள், முதியவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட அனைவருக்கும் துன்பங் களை ஏற்படுத்துகிறது. போரின் தீவிரத்தை குறைக்கும் சர்வதேச சமூகத்தின் அனைத்து முயற்சிகளை யும் வரவேற்கிறோம். தற்போது மனிதா பிமான உதவி மற்றும் நிவாரணப் பொருட்கள் பாதுகாப்பாக பாலஸ்தீன மக்களை சென்றடை வதை உறுதிப்படுத்த வேண்டிய அவசரத் தேவை உள்ளது என்றும் பணயக்கைதிகள் அனைவரும் விடு விக்கப்பட வேண்டும் என்றும் பேசி னார். உலகளவில் சர்வதேச மனிதாபி மான சட்டத்தை கடைப்பிடிக்க வேண்டிய கடமை உள்ளது என்று நாங்கள் நம்புகிறோம் என்றும் குறிப் பிட்டார். போரில் பொதுமக்கள் கொல்லப்படுவதற்கு கண்டனம் தெரி வித்தார். எனினும் போர்நிறுத்தத்திற் கான சீனாவின் கோரிக்கையை வழி மொழியவோ போர் நிறுத்தத்திற்கான அழைப்போ விடுக்காமல் தவிர்த்துவிட்டார்.
மாறும் இந்திய நிலைப்பாடு
இந்த அவசரச் சூழல் குறித்து விவாதிக்க கூட்டப்படும் இணைய கூட்டத்தின் முக்கியத்துவம் கருதி பிரிக்ஸ் பிளஸ் கூட்டமைப்பின் உறுப்பினர்களான சீனா,ரஷ்யா, பிரேசில்,சவூதி அரேபியா, அர் ஜெண்டினா, எகிப்து, எத்தியோப் பியா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளின் தலைவர்கள் மற்றும் ஐநா பொதுச்செயலாளர் அந்தோனியா குட்டரெஸ் ஆகியோர் இந்த இணைய கூட்டத்தில் பங்கேற்ற நிலையில் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்றுள்ள காரணங்களால் பிரதமர் மோடி இந்த இணையவழி கூட்டத்தில் பங்கேற்க மறுத்துவிட்டார் என தெரிவிக்கப்பட்டது. மேலும் ஐநா சபையில் கொண்டு வரப்பட்ட போர் நிறுத்த தீர்மானத்திற்கு பிரிக்ஸ் நாடுகள் அனைவரும் ஆதர வாக வாக்களித்த நிலையில் இந்தியா, எத்தியோப்பியா ஆகியவை மட்டுமே வாக்களிக்காமல் தவிர்த்துவிட்டன. இந்த இணைய வழி கூட்டத்தில் இந்திய பிரதமர் பங்கேற்காதது மற்றும் போர் நிறுத்தத்தை வலியுறுத்தாமல் இருக்கும் நிலை உள்ளிட்ட அமெரிக்க சார்பு நிலை இந்திய வெளியுறவு கொள்கை மீதான கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.