சீனாவின் விவசாயத்துறையில் பயன் படுத்தப்படும் அதிநவீன தொழில்நுட்பங்க ளை மியான்மர் நாட்டுடன் பகிரும் கூட்டாண்மை மற்றும் தொழில்நுட்ப பரிமாற்றங்களை வளர்க்கும் நிகழ்ச்சி மியான்மரின் நே பை தாவில் நடைபெற்றது.
சீனாவின் வேளாண் பல்கலைக்கழகம், வெளியுறவு அமைச்சகம், நிதி அமைச்ச கம் மற்றும் வேளாண்மை மற்றும் கிராமப்புற விவகாரங்கள் துறை அமைச்சகத்தின் ஆதர வுடன், மியான்மரின் விவசாயம், கால்நடை மற்றும் நீர்ப்பாசன அமைச்சகத்துடன் இணைந்து இந்த தொழில்நுட்ப பரிமாற்ற நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்வில் மியான்மரின் வேளா ண்மை,கால்நடை மற்றும் நீர்ப்பாசன அமைச்ச கம், ஏஜின் வேளாண் பல்கலைக்கழகம் மற்றும் விவசாய துறை அதிகாரிகள், நிபுணர்கள், தொ ழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் தயாரிப்பாளர் கள், சீனாவின் மேம்பட்ட அரிசி உற்பத்தி மற்றும் இயந்திரமயமாக்கல் தொழில்நுட்பங்களைப் பற்றி கற்றுக்கொண்டனர்.
சீனா-மியான்மரின் இந்த கூட்டு முயற்சி மூலம் மியான்மரின் விவசாயத் துறையை அதன் தனித்துவமான விவசாய நிலங்களுக்கு ஏற்றவாறு மாற்றியமைத்தல் மற்றும் அதிநவீன இயந்திரமயமாக்கல் மூலம் தீர்வுகள் வழங்கும் வகையில் வளர்ச்சியில் கவனம் செலுத்தப் படுகிறது என அவர்களின் கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளனர்.