கொழும்பு, ஏப்.17- கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை நாட்டில் பெட்ரோல்,டீசல் மற்றும் அத்தியாவசியப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவு கிறது. இதனால் ஆட்சியாளர்களுக்கு எதி ரான மக்களின் போராட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பொருளாதாரத்தை மீட்க பல்வேறு நாடுகள் மற்றும் அமைப்புகளிடம் கடன் வாங்க தீவிரமாக முயற்சிக்கிறது. அத னொரு பகுதியாக ஐஎம்எப் (சர்வதேச நாணய நிதியம்) இடமிருந்து நான்கு பில்லி யன் டாலரை கடனாக பெற உள்ளது. இதற்காக இலங்கை அரசாங்கப் பிரதிநிதி கள் குழு அமெரிக்கா சென்றுள்ளது. புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நிதியமைச்சர் அலி சப்ரி தலைமையிலான குழு ஏப்ரல் 19-ஆம் தேதி முதல் ஏப்ரல் 24-ஆம் தேதி வரை சர்வ தேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்துகிறது. சர்வதேச நாணய நிதியம் மற்றும் வெளி நாடுகளில் பெற்ற கடனை திரும்ப செலுத்த கால அவகாசம் கோரியுள்ளது இலங்கை. பொருளாதார மறுசீரமைப்பு நடவடிக்கை களில் ஈடுபட்டுள்ளதால், தற்போது கடனை திருப்பித் தர இயலாது என இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் பி.நந்தலால் வீரசிங்க கூறியதாவது: “கடனை செலுத்துவது சவா லானது மட்டுமல்ல, சாத்தியமற்றது என்ற நிலைக்கு இலங்கை வந்துள்ளது. கடனை மறுசீரமைப்பது மட்டுமல்ல சில கடன்கள் கட்டுவதை தவிர்ப்பதுதான் தற்போது எடுக்கவேண்டிய சிறந்த நடவடிக்கை எனக் கூறியிருந்தார்.