கொழும்பு, மார்ச் 24- இந்தியா அளித்த கடனுதவியை இலங்கை அரசு தவறான வழியில் பயன்படுத்துவதாக அந்நாட்டு எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கட்சி குற்றம்சாட்டியுள்ளது. இதுகுறித்து நாடாளுமன்றத்தில் அக்கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச பேசுகையில், இந்தியா தந்த பணத்தை கொண்டு அரசியல் ஆதாயம் அடையும் வகையில் 14 ஆயிரம் கிராமங்களில் கடைகள் அமைத்து வருவதாக ஆளுங்கட்சி மீது குற்றம்சாட்டினார். உணவ கங்களிலும் பெட்ரோல் பங்க்குக ளிலும் நீண்ட வரிசையில் நிற்கும் மக்களுக்கு பலன் தரும் வகை யில்தான் அப்பணம் செலவழிக்கப் பட்டிருக்கவேண்டும் என்றும் கடனு தவி விவகாரத்தில் இந்தியாவுடன் இலங்கை அரசு சில ரகசிய உடன் பாடுகளை மேற்கொண்டுள்ளதா கவும் அது குறித்து அரசு வெளிப் படையாக தெரிவிக்கவேண்டும் என்றும் வலியுறுத்தினார். அந்நியச் செலாவணி பற்றாக்குறை பிரச்ச னையில் தவித்து வரும் இலங்கை க்கு இந்தியா கடந்த வாரம் 7,500 கோடி ரூபாய் கடனுதவி வழங்கியது.