world

img

பாலின சமத்துவத்தை உறுதிப்படுத்த வேண்டும்

ரெய்காவிக்,அக்.26- பாலின சமத்துவம் கோரியும்,பாலின அடிப்படையிலான ஊதிய இடைவெளிக்கு எதிராகவும்  பாலியல் வன்முறைகளுக்கு எதிராகவும் ஐஸ்லாந்து நாட்டில் பிரதமர் கேத்ரின் ஜாகோப் ஸ்டோட்டிர் உள்ளிட்ட 100,000 பெண்கள் நாடு தழுவிய அளவில்  24 மணி நேர வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

3.73 லட்சம் மக்கள்தொகை கொண்ட அந்நாட்டில் 90% தொழிலாளர்கள் தொழிற் rங்கமாக அணிதிரண்டுள்ளனர். ஊதியம் வழங்கப்படும் பணிகளில் உள்ள பெண்கள் மட்டுமல்லாது ஊதியம் வழங்கப்படாத வீட்டுப் பணிகளில் உள்ள பெண்கள் உட்பட இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் நாட்டின் பிரதமர் உட்பட 40 சதவீத நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.1975 க்கு பிறகு நடைபெற்ற 7 வேலை நிறுத்தங்களில் இதுவே மிகப்பெரிய வேலை நிறுத்தமாகும்.

1961 ஆம் ஆண்டு சம ஊதிய விதிகள் கொண்டு வந்த போதிலும்,இன்னும் ஊதிய அடிப்படையில் பெண்கள் ஆண்களை விட பின்தங்கியுள்ளனர் என்றும் ஆண்களை விட பெண்களுக்கு குறைவான ஊதியம் வழங்கவில்லை எனக் கூற தொழில் நிறுவ னங்களை  2018 ஆம் ஆண்டு  நாடாளுமன்ற உறுப்பினர்கள் வற்புறுத்தியதாகவும், இன்னும் பல பெண்கள் முன்னேற்றம் அடை யாமல் பின்தங்கியுள்ளனர் எனவும்  போராட்டக் காரர்கள் தெரிவித்துள்ளனர். 

நீடிக்கும் சமத்துவமின்மை 

ஐஸ்லாந்து புள்ளி விவரங்களின் படி, 2021 ஆம் ஆண்டு மொத்த ஊதிய இடை வெளி 10.2 சதவீதமாக இருந்தது. நிதி மற்றும் காப்பீட்டு வேலைகளில் 29.7 சதவீதமாக அதிகரித்துள்ளது. 

ஐஸ்லாந்து வேலை நிலைமைகளில் பாலின சமத்துவம் கொண்ட நாடாக கூறப் பட்டாலும்  சுகாதாரம் மற்றும் கல்வித்துறை களில்  குறைவான ஊதியத்தில் அதிகளவு பெண்கள் வேலை செய்கின்றனர்.

மேலும்  2018 ஆம் ஆண்டில் ஐஸ்லாந்து பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில்,  40 சத வீதத்திற்கும் அதிகமான பெண்கள் பாலியல் வன்முறையை எதிர்கொள்கிறார்கள் என்றும் நான்கில் ஒரு பெண் பாலியல்  வன்கொடு மைக்கு ஆளாகியிருப்பதும்  தெரிய வந்தது. இந்நிலையில் “ஐஸ்லாந்து ‘சமத்துவ சொர்க்கம்’ என்று அழைக்கப்பட்டாலும்  இன்னும் பாலின வேறுபாடுகள் உள்ளது அதை  சரிசெய்வதற்கான  அவசரத் தேவை உள்ளது” என ஐஸ்லாந்து பொது ஊழியர்க ளுக்கான கூட்டமைப்பு செய்தி தொடர்பாளர்.ஃப்ரீஜா ஸ்டீங்ரிம்ஸ்டோட்டிர் கூறியுள்ளார்.