world

உக்ரைனில் போரைத் தொடர ஐரோப்பிய தலைவர்கள் ரகசியத் திட்டம்

பிரஸ்ஸல்ஸ்,டிச.19- ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள நாடுக ளின் தலைவர்கள் பங்கேற்கும் உச்சி மாநாடு டிச.19 அன்று நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு முன்னதாக டிச.18 நள்ளிரவு பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் உள்ள நேட்டோ பொதுச்செயலாளர் மார்க் ரூட்டின் இல்லத்தில் ஒரு ரகசிய கூட்டம் நடைபெற்றது.  

இந்த ரகசிய கூட்டத்தில் ஜெர்மன் அதிபர் ஓலாஃப் ஸ்சோல்ஸ், இத்தாலி பிரதமர் மெலோனி, ஐரோப்பிய ஆணையத்தின் தலை வர் உர்சுலா வான் டெர் லேயன், நேட்டோ பொதுச்செயலாளர் மார்க் ரூட் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். இந்த கூட்டத்தில் உக்ரை னுக்கு  நீண்டகால போருக்கு தேவையான ஆதரவு கொடுப்பது, செயல்திட்டங்களை உருவாக்குவது, அதற்காக திட்டமிடுவது, மூளைச்சலவை செய்வது, இவற்றை நடைமுறைப்படுத்த முன்மொழிவுகளை கொண்டுவருவது குறித்து பேசப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.  

அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடு க்கப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப், தான் பதவி ஏற்ற சில நாட்களில் உக்ரைன் ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டு வருவேன் என வாக்குறுதி அளித்திருந்தார். இதனை தொடர்ந்து சமீபத்தில் உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி ரஷ்யாவுடனான அமைதி பேச்சுவார்த்தைக்கு தயாராக வேண்டும் என பேசி இருந்தார். மேலும், ஐரோப்பிய நாடுகள் உக்ரைன் போருக்கு முறையாக செலவு செய்வதில்லை; பெரும்பா லான ராணுவ செலவுகளை அமெரிக்காவின் தலையில் ஏற்றி விடுகின்றன;

அதே போல அமெரிக்க பொருட்களை அதிகளவு இறக்கு மதி செய்வதில்லை எனவும் குற்றம் சாட்டியிருந்தனர்.  இந்நிலையில் ஐரோப்பிய ஒன்றியத் தலை வர்களின் உச்சிமாநாட்டிற்கு முன்னதாக நடந் துள்ள இந்த ரகசியக் கூட்டம் எதிர்காலத்தில் போரை தொடர்ந்து நடத்துவதற்கானது என தெரிய வந்துள்ளது.  

போரை நிறுத்தி ரஷ்யாவுடன் அமைதி உடன்படிக்கையை நோக்கிச் செல்லவேண்டும் என மேற்கு நாடுகளின் தலைவர்கள் உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கு அழுத்தம் கொடுப்பதற்கு பதிலாக அவர்கள் “வெற்று” பாதுகாப்பு உத்தரவாதங்களை வழங்க முயற் சிக்கின்றனர் என ஐரோப்பிய ஒன்றியத்தின் மூத்த வெளியுறவுத்துறை அதிகாரியான காஜா கல்லாஸ் பைனான்சியல் டைம்ஸ் இதழுக்கு பகிரங்கமாக  பேட்டியளித்துள்ளார்.  

உச்சி மாநாட்டிற்கு முன்னதாக நடந்த இந்தக் கூட்டம் மாநாட்டின் முடிவுகளில் பலமான தாக்கத்தை உருவாக்கும் எனக் கூறப்படுகிறது. மேலும் உலக பொருளாதாரத்தையும் அமைதி யையும் அமெரிக்காவின் தலைமையில் சிதைத்து வரும் மிக முக்கியமான நாடு களாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் உள்ளன. இந்நாடுகளின் கூட்டமைப்பு ஏகாதி பத்தியத்திற்கு ஆதரவாக எடுக்கும் ஒவ்வொரு  முடிவும் உலக நாடுகளை பல ஆண்டுகளுக்கு பதிப்புக்கு உள்ளாக்கும் என்ற நிலையில் தற்போதைய நகர்வுகள் உலக நிலைமையை தீவிரமாக்குகின்றன.