world

img

செங்கடலில் இஸ்ரேலுக்குச் செல்லும் கப்பல்களை முடக்கும் ஹவுதிகள்

வடக்கு ஏமனை கட்டுப்பாட்டில் வைத்துள்ள   ஹவுதிகள் அமைப்பு செங்கடல் வழியாக செல்லும் இஸ்ரேல் தொடர்புடைய  அனைத்து வணிகக் கப்பல்கள் மீதும் தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருவதால் கப்பல் வணிகம் முடங்கி உலக பொரு ளாதார நெருக்கடி  ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள் ளது.

இஸ்ரேல் பாலஸ்தீனர்கள் மீது நடத்திவரும் தாக்குதலை நிறுத்த வேண்டும் என்றும் அவர்க ளுக்கு தேவையான நிவாரணப்  பொருட்கள் முழுமையாக கொடுக்கப்பட வேண்டும் என்றும் அதுவரை இஸ்ரேலுக்கு தொடர்புடைய அல்லது இஸ்ரேல் செல்கிற  அனைத்துக் கப்பல்க ளும் சிறைபிடிக்கப்படும் அல்லது தாக்குதலுக்குள் ளாகும் என்றும்  ஹவுதி குழுவினர் எச்சரித்துள் ளனர்.

கேலக்சி லீடர் என்ற வணிகக் கப்பலை சிறை பிடித்தது  துவங்கி  மிக சமீபத்தில்  நார்வே நாட்டின் வணிக டேங்கர் கப்பலை  ஏவுகணை மூலம் தாக்கியது வரை ஹவுதிகள்  வணிகக்  கப்பல்களை தாக்கி இஸ்ரேலுக்கு  ஒரு பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தி வருகின்றனர்.

தற்போது அந்த கடல் பகுதி வழியாக பய ணிக்கும் வணிகக் கப்பல்கள் மூலம்  சரக்குகளை ஏற்றுமதி செய்ய அதிகமாக செலவு செய்யும் நிலை உருவாகியுள்ளது. இதனால்  உலகளாவிய வணிகம்   சீர்குலையும் அபாயம்  உருவாகி உள்ள தாக வணிக நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

இந்த தாக்குதல்கள் பிராந்திய போராக மாறுவ தோடு மிக வேகமாக உலக பொருளாதாரத்திற்கான அச்சுறுத்தலாக மாறும்.தற்போது தெற்கு செங்க டலை  அதிக ஆபத்துள்ள வணிகப்  போக்குவரத்து பகுதியாக இங்கிலாந்தை சேர்ந்த காப்பீட்டு நிறுவனம்  பட்டியலிட்டுள்ளது. 

இதனால்  ஏழு நாள் பயணத்திற்கு  போர்க் கால காப்பீட்டு பிரீமியங்களை காப்பீட்டு நிறுவனங்கள் பல்லாயிரக்கணக்கான டாலர்கள் அதிகரித்து  கொள்ளை  லாபம் பார்த்து வருகின்றன.குறிப்பாக எண்ணெய் டேங்கர் கப்பல்களுக்கான  தினசரி கட்டணங்கள் கடந்த மாதத்தை விட இம்மாதம் 20 ஆயிரம் டாலர்கள் உயர்ந்து 60 ஆயிரம் டாலர்களாகி விட்டது. 

செங்கடல் மற்றும் ஏதன் வளைகுடாவை இணைக்கும் குறுகிய பகுதியான பாப் அல்-மண்டப் நீரிணை (ஜலசந்தி) வழியாக சுமார் 23,000 கப்பல் கள் பயணித்து வருகின்றன.இந்த பிராந்திய பகுதி கப்பல்களை எளிமையாக தாக்க வழிவகுக்கிறது. 

இந்த ஆபத்துகளை தவிர்ப்பதற்காக சில கப்பல் நிறுவனங்கள்,  தங்கள் கப்பல்களை செங் கடலில் இருந்து தென் ஆப்பிரிக்காவின் நன்னம்பிக்கை முனை வழியாக  அனுப்ப முடிவு செய்துள்ளன. இது அதிக  பயண நேரங்கள் மற்றும் கூடுதல் செலவுகளை அந்த நிறுவனங்களுக்கு ஏற்படுத்தி வருகிறது. இந்த வணிக நிறுவனங்கள் செய்து வரும் கூடுதல் செலவுகள் அனைத்தும் மக்கள் தலையில் விலை உயர்வாக சுமத்தப் படும். இது உலகம் முழுவதும் ஒரு தீவிர பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.