ஏதென்ஸ்,டிச.3- கிரீஸ் நாட்டில் சுகாதாரத்துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தி யும், ,30,000 காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரியும் தலைநகர் ஏதென்ஸில் நாடாளுமன்றத்தை நோக்கி மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் மாபெரும் பேரணி நடத்தினர். மேலும் தெசலோனிகி, ஹெராக்லியோன், பலமாஸ் மற்றும் நாட்டின் அனைத்து முக்கிய நகரங்களிலும் பிரம்மாண்ட பேரணிகளை நடத்தியுள்ளனர்.
ஊதியத்தை முடக்கிய சர்வதேச நாணய நிதியம்
சர்வதேச நாணய நிதியம், ஐரோப்பிய ஆணையம், ஐரோப்பிய மத்திய வங்கி ஆகியவை வளர்ச்சியின் பெயரில் கடன் கொடுத்து விட்டு நாட்டின் பொருளாதாரம் வளர தொழிலாளர்களின் ஊதியத்தை குறைக்க வேண்டு மென கொடுத்த அழுத்தத்தால் தொழிலாளர்களின் ஊதிய விகிதம் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக வெட்டப்பட்டு வருகிறது.
ஆயுதங்களுக்கு அதிக செலவு
தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்று அவர்களின் பொருளாதார பிரச்சனைகளை சரி செய்யாமல் அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.5 சதவீதத்தை ராணுவத்திற்காக மட்டுமே கிரீஸ் அரசு செலவழிக்கிறது. இது நேட்டோ கூட்டமைப்பு உறுப்பினர்கள் செலவு செய்வதை விட அதிகமாகும்.
வெட்டப்பட்ட தொழிலாளர் உரிமைகள்
அரசாங்கம் செய்த ஊதிய முடக்கத்தின் காரணமாக உயர்ந்து வரும் பண வீக்கத்தில் சுகாதார ஊழியர்கள் கடந்த 10 ஆண்டுகளாக , எதிர்கொண்டு வரும் வாழ்க்கைச் செலவு நெருக்கடி, பணியாளர்கள் பற்றாக்குறை, அதனால் உருவான கட்டாய கூடுதல் பணிநேரம், குறைந்த ஊதியம், தாமதமான சம்பள மற்றும் இதர சலுகை விநியோக நிறுத்தம், ஊதியத்துடனான விடுப்பு மற்றும் நூலகத்திற்கான சந்தா பணத்தை வெட்டியது உள்ளிட்ட பல பிரச்ச னைகளை இந்த போராட்டத்தின் போது எடுத்துரைத்தனர்.