மீண்டும் சீன நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை
அமெரிக்கா மீண்டும் சில சீன நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடை விதித்துள்ளது. ஏற்கனவே சில சீன நிறுவனங்கள் மீது அமெ ரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ள நிலையில் தற்போதைய தடை அறிவிப்பிற்கு சீனா கடுமையான கண்டனங்களைத் தெரி வித்துள்ளது. பல அமெரிக்க நிறுவனங்கள் தங்களுடைய உற்பத்திக்கு சீன நிறுவ னங்களை சார்ந்துள்ள நிலையில் இந்த தடைகள் அமெரிக்க நிறுவனங்களையும் பாதிக்கத் துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
சவுதியில் செயற்கை நுண்ணறிவு மூன்றாவது உச்சி மாநாடு
செயற்கை நுண்ணறிவு மூன்றாவது உச்சி மாநாடு சவுதி அரேபியாவில் நடை பெற உள்ளது. தலைநகர் ரியாத்தில் உள்ள கிங் அப்துல்அஜிஸ் சர்வதேச மாநாட்டு மையத்தில் செப்டம்பர் 10 முதல் 12 வரை இம்மாநாடு நடை பெறும் என சவுதி அரேபியாவின் தரவு மற்றும் ஏஐ ஆணையம் அறிவித்துள்ளது. மூன்று நாள் மாநாட்டில் 100 நாடுகளைச் சேர்ந்த தொழில் நுட்ப வல்லுநர்கள், கொள்கை வடிவமைப்பா ளர்கள், ஆலோசனையாளர்கள் என சுமார் 300 பேர் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரிவினைவாதிகள் தாக்குதல் பலி எண்ணிக்கை 70 -ஐ கடந்தது
பாகிஸ்தான் பலுசிஸ்தான் மாநிலத்தில் பலுச் விடுதலை ராணுவம் என்ற பிரிவினைவாத இயக்கம் நடத்திய தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 74 ஆக உயர்ந்துள்ளது. பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தில் இருந்து வந்த பேருந்தை கடத்தி இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. பலுசிஸ்தான் மற்றும் கைபர் பக்துன்க்வா ஆகிய பாகிஸ்தான் மாநிலங்களில் 2023 ஆம் ஆண்டு மட்டும் 650 க்கும் மேற்பட்ட பயங்கரவாத தாக்குதல் நடந்துள்ளது.
பைடன் அரசுக்கு எதிராக திரும்பும் மார்க் ?
முகநூல்,இன்ஸ்டா உள்ளிட்ட சமூக வலை தளங்களில் கொரோனா தொடர்பான பதிவுகளை சென்சார் செய்ய சொல்லி பைடன் - ஹாரிஸ் அரசு அழுத்தம் கொடுத்தாக மார்க் ஸூக்கர்பர்க் தெரிவித்துள்ளார். டிரம்ப் இன் குடிய ரசுக் கட்சியின் நீதிக் குழுவிடம் இதனை கடிதம் மூலம் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து மார்க் ஸூகர்பெர்க்கும் டிரம்ப் ஆதரவாளராக மாறிவிட்டாரா? என விவாதங்கள் எழுந்துள்ளது. ஏற்கனவே எலான் மஸ்க் மாதம் 300 கோடிக்கும் அதிகமாக டிரம்புக்காக செலவு செய்து வருகிறார்.
பாவெல் துரோவ்வை சந்திக்க அனுமதி கேட்கும் ரஷ்யா
டெலிகிராம் சிஇஓ பாவெல் துரோவ்வை சந்திக்க ஐக்கிய அரபு அமீரகமும் ரஷ்யாவும் அனுமதி கேட்டுள்ளன.டெலிகிராம் செயலியில் நடைபெறும் குற்ற நடவடிக்கை களை தடுக்காததால் பாவெல் கைது செய்யப் பட்டதாக பிரான்ஸ் தெரிவித்துள்ளது. இந்நிலை யில் அவரை தங்கள் நாட்டு தூதரக அதிகாரி கள் சந்திக்க அனுமதி கொடுக்க வேண்டுமென கோரியுள்ளதாக ரஷ்யா மற்றும் அரபு அமீர கத்தின் வெளியுறவுத்துறை உறுதி செய்துள் ளது.