world

img

தீக்கதிர் உலக செய்திகள்

ரஷ்யா -அமெரிக்கா  கைதிகள் பரிமாற்றம்

கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தின் படி ரஷ்யா-அமெரிக்கா கைதிகளை பரிமாற்றம் செய்துள்ளன. அமெரிக்காவில் இருந்து 2 சிறுவர்கள் உட்பட 10 கைதிகள் ரஷ்யாவிற்கும், ரஷ்யாவில் இருந்து அமெரிக்க பத்திரிகையாளரான இவான் கெர்ஷ்கோவிச், முன்னாள் அமெரிக்க கடற்படை வீரர் பால் வீலன் உள்ளிட்ட சிலரும் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். துருக்கியில் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பிறகு இந்த கைதிகள் பரிமாற்றம் நடந்துள்ளது.

இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா  ஏவுகணைத் தாக்குதல்

ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல் மீது மீண்டும் ஏவுகணைத் தாக்குதலை துவங்கியுள்ளது. தெற்கு லெபனானில் தாக்குதல் நடத்திய இஸ்ரேல் ராணுவம் ஹமாஸ் அமைப்பின் உயர்நிலை  தளபதி ஃபுவாட் ஷுக்ரைக்கை படுகொலை செய்தது. இதனை தொடர்ந்து சில நாட்களாக ஏவுகணை தாக்குதலை நடத்தாமல் இருந்த ஹிஸ்புல்லா அமைப்பு, ஹமாஸ் அமைப்பின் தலைவர்  நஸ்ரல்லா உத்தரவை தொடர்ந்து வெள்ளிக்கிழமை  முதல் மீண்டும் இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதலை துவங்கியுள்ளது.    

போர் நிறுத்தமே   அமைதியை நிலை நாட்டும்

லெபனான் மற்றும் ஈரானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல் மத்திய கிழக்கு பிராந்தியத்தில்  போர் விரிவாக்கத்தை தூண்டு கிறது. இது மோசமானது இதனை தவிர்க்க வேண்டும். பணயகைதிகள் அனைவரையும் விடுவிக்க வேண்டும். காசா முழுவதும் நிவார ணப் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்வது டன் போர் நிறுத்தத்தை மேற்கொள்ள வேண்டும். அது தான் மத்திய கிழக்கு நாடுகள் முழுவதும் அமை தியை கொண்டுவரும் என ஐ.நா. பொதுச் செயலா ளர் அந்தோனியோ குட்டரெஸ் குறிப்பிட்டுள்ளார். 

ஹமாஸ் ராணுவ தளபதியை  படுகொலை செய்த இஸ்ரேல் 

ஹமாஸின் ராணுவ தளபதியான முகமது டெய்ஃப்பை கொலை செய்ததை உறுதி செய்துள்ளது இஸ்ரேல். கடந்த ஜூலை மாதம் 13 அன்று காசாவில் உள்ள கான் யூனிஸ் பகுதியில் நடத்திய வான்வழித் தாக்குதலில் அவர் கொல்லப்பட்டார் என 2 வாரங்களுக்கு பிறகு உறுதியாகியுள்ளது. ஹமாஸ் அமைப்பின் தலைவர் இஸ்மாயில் ஹனியே படுகொலை செய்யப்பட்ட மறுநாளே இஸ்ரேலிடம் இருந்து இந்த அறிவிப்பு வெளியானது போர் பதற்றத்தை அதிகப்படுத்தியுள்ளது.

வெப்பத் தாக்குதலில்  4 லட்சம் பேர் பலி 

2000 முதல் 2019 ஆம் ஆண்டுகளுக்கு இடை யில் உலகம் முழுவதும் சுமார் 4,89,000 பேர் வெப்பம் தொடர்பான காரணங்களால் பலியாகி யுள்ளனர். இதில் 36 சதவீதத்துக்கும்    (1,76,000 ) அதிகமானோர்  ஐரோப்பிய நாடுகளில் பலியாகி யுள்ளதாக  உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பிய பிராந்தியத்திற்கான  இயக்குநர் டாக்டர் ஹான்ஸ் ஹென்றி பி. க்ளூஜ் தெரிவித்துள்ளார். மேலும் தீவிர காலநிலை மாற்றத்தை கட்டுக்குள் கொண்டு வரவேண்டும் எனவும் மாற்று எரிசக்திகளை ஊக்கு விக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.