சைபீரியாவில் தோன்றிய பனிப்புயலின் தாக்கம் மங்கோலியா வரை பரவியுள்ளதால் மங்கோலியா முழுவதும் கடுமையான குளிர் நிலவுகிறது. இதனால் காய்ச்சல் மற்றும் தொற்று நோய்கள் அதிகமாக பரவி வருகிறது. எனவே குழந்தைகளை நோய்த் தொற்றில் இருந்து பாதுகாக்க அனைத்து பள்ளிகளிலும் நேரடி வகுப்புகளுக்கு பதில் ஆன்லைன் வகுப்புகள் நடத்த கல்வி மற்றும் அறிவியல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.