நமீபியா நாட்டின் ஜனாதிபதி ஹேஜ் ஜிங்கோப் ஞாயிற்றுக்கிழமை 80 வயதில் மரணமடைந்தார். அதனைத் தொடர்ந்து அந்நாட்டின் இடைக்கால மற்றும் நான்காவது ஜனாதிபதியாக நாங்கொலோ பும்பா பதவி வகிக்க உள்ளார். ஹேஜ் ஜிங்கோப் தலைமையில் நாங்கொலோ துணை ஜனாதிபதியாக பதவி வகித்து வந்தார். 2024 நவம்பர் மாதம் அந்நாட்டில் நடை பெற உள்ள பொதுத் தேர்தல் வரை அவர் இப்பதவியில் இருப்பார் என குறிப்பிடப் பட்டுள்ளது.