world

img

தீக்கதிர் உலக செய்திகள்

லா நினா உருவாக வாய்ப்பு 

அடுத்த மூன்று மாதங்கள் ‘லா நினா’ வானிலை உருவாக்கலாம். இது குறுகிய காலத்திற்கு மட்டுமே இருக்கும் எனவும் பலவீனமாக இருக்கும் எனவும்  உலக வானிலை அமைப்பு (WMO) அறிவித்துள்ளது. 2024 டிசம்பர் மாதம் முதல் 2025 பிப்ரவரி மாதம் வரை தற்போதைய நிலைகளிலிருந்து லா நினா நிலைக்கு மாறுவதற்கு 55 சதவீதம் வரை வாய்ப்புகள் உள்ளது என குறிப்பிட்டுள்ளனர். இதனால் அறுவடை காலத்தில் பயிர்கள் கடுமையான சேதத்தை சந்திக்கும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

தேசத்துரோகக் குற்றச்சாட்டில்  தென் கொரிய அமைச்சருக்கு பிடிவாரண்ட் 

தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக்-யோல் அந்நாட்டில் ராணுவச்சட்டத்தை அமல் படுத்தி கடுமையான எதிர்ப்பிற்கு பிறகு பின் வாங்கி னார். இதனைத்தொடர்ந்து பாதுகாப்புத் துறை அமைச்சர் கிம் யோங்-ஹியூன் மீது தேசத்துரோகக் குற்றச்சாட்டு வைக்கப்பட்டதுடன் கைது வாரண்டும் பிறப்பித்துள்ளது தென் கொரிய நீதிமன்றம். குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில் அமைச்சர் தனது அதி கார பலத்தை  பயன்படுத்தி ஆதாரங்களை அழித்துவிடு வார் என்று கவலைப்படுவதாக அரசுத் தரப்பு கோரிக் கையை ஏற்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பிரேசில் ஜனாதிபதி  குணமடைந்து வருகிறார்

பிரேசில் ஜனாதிபதி லூலா தலையில் ஏற்பட்ட ரத்தக் கசிவுக்கான அறுவை சிகிச்சைக்குப் பிறகு குண மடைந்து வருவதாக அந்நாட்டின் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. கடந்த அக்டோபர் மாதம் அவரது வீட்டில் ஏற்பட்ட சிறு விபத்தின் கார ணமாக கீழே விழுந்ததில் காயம் ஏற்பட்டது. நீண்ட பயணத்தை தவிர்க்க வேண்டும் என்ற மருத்துவர்க ளின் ஆலோசனையின் காரணமாக ரஷ்யாவில் நடை பெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் நேரடியாகக் கலந்து கொள்ளா மல் தவிர்த்துவிட்டார். தற்போது அறுவை சிகிச்சை முடிந்து குணமடைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாட் நாட்டில் இருந்து  பிரான்ஸ் ராணுவம் வெளியேற்றம் 

சாட் நாட்டில் இருந்து பிரான்ஸ் தனது ராணுவ வீரர்களை திரும்பப் பெறத் துவங்கியுள்ளது. இந்த வார துவக்கத்தில் அந்நாட்டில் இருந்து பிரான்ஸ் ராணுவத்தின் இரண்டு ‘மிராஜ்’ ரக போர் விமானங்கள் புத னன்று வெளியேறியது. கடந்த சில வாரங்களுக்கு முன் பிரான்ஸ் உடனான பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை ரத்து செய்ததுடன் அந்நாட்டில் இருந்து பிரான்ஸ் ராணுவம் வெளியேற வேண்டும் எனவும் சாட் ஜனாதிபதி மஹாமத்  அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

சிரியா கப்பற்படை தளங்கள்  மீது இஸ்ரேல் குண்டுவீச்சு

சிரியாவின் ராணுவக் கட்டமைப்புகளை அழிக்கும் பணியில் இஸ்ரேல் ராணுவம் ஈடுபட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, சிரியாவின் அல்-பைடா மற்றும் லதாகியா   துறைமுகங்களில் உள்ள கடற்படை தளத்தின் மீது கொடூரமான தாக்குதல்களை நடத்தியுள்ளது. இந்த தாக்குதலை  இஸ்ரேல் பாதுகாப்புத்துறை உறுதிப்படுத்தியுள்ளது. கோலன் குன்றுகள் வழியாக நுழைந்துள்ள ​இஸ்ரேல் ராணுவம், ​சிரியா முழுவதும் இஸ்ரேல் போர் விமானங்கள் 350 க்கும் மேற்பட்ட வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது.