world

img

தீக்கதிர் உலக செய்திகள்

லெபனான் மீது இஸ்ரேல்   248 முறை தாக்குதல்

லெபனானுடன் மேற்கொள்ளப்பட்ட போர் ஒப்பந்தத்தை மீறி இஸ்ரேல் ராணுவம் அந்நாட்டின் மீது சுமார் 248 முறை தாக்குதல் நடத்தியுள்ளது. நவம்பர் 27 அன்று லெபனான் உடன் போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதனைத்  தொடர்ந்து பயங்கரவாதிகள் மூலம் சிரியா வில் ஆட்சிக்கவிழ்ப்பை நடத்திய பிறகு சிரி யாவின் மீது தாக்குதல் நடத்திவருகிறது. தற் போது இஸ்ரேல் ராணுவம் காசா,சிரியா, லெபனான்,ஏமன் ஆகிய 4 நாடுகளின் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

 சர்வதேச உதவியை கேட்கிறது வனாட்டு தீவு

வனாட்டு தீவு நிலநடுக்க சேதத்தில் இருந்து மீளவும் மீட்புப்பணிகளை மேற்கொள்ள வும் சர்வதேச உதவியை அத்தீவு அரசாங்கம்  கோரியுள்ளதாக ஐ.நா செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் தெரிவித்துள்ளார்.  நிலநடுக் கத்திற்குப் பிறகு நூற்றுக்கணக்கான வீடுகள் தரைமட்டமாகிவிட்டன. மருத்துவமனைகள், அரசு அலுவலகங்கள், தீயணைப்பு நிலையங் கள் என பொது கட்டிடங்கள், சாலைகள், நீர் தேக் கங்கள் மற்றும் எரிவாயு குழாய்கள் அனைத்தும்  கடுமையாகச் சேதம் அடைந் துள்ளன. 

ஏமனில் குண்டுவீசி 9 பேரை படுகொலை செய்த இஸ்ரேல்

இஸ்ரேல் ராணுவம் ஏமனில் குண்டுவீசி 9 நபர்களை படுகொலை செய்துள்ளது. இந்த தாக்குதலில் 10 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு முன்னதாக ஏமனில் உள்ள ஹவுதி அமைப்பினர் இஸ்ரேலின் ஜஃபா நகரில் அமைந்துள்ள இரண்டு ராணுவத்தளங்களை நோக்கி  சக்தி வாய்ந்த இரண்டு ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை ஏவினர். இதனை தொடர்ந்தே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. 

அமேசான் தொழிலாளர்கள்  வேலை நிறுத்தம் 

அமேசான் நிறுவனத்தின் நியாயமற்ற தொழி லாளர் விரோத நடைமுறைகளை முடிவுக்கு கொண்டு வர வலியுறுத்தி  அமெரிக்காவில் போராட்டம். கலி போர்னியாவில் உள்ள (Teamsters) தொழிற்சங்கம் இந்த வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளது.  டிச- 10 முதல் ஆயிரக்கணக்கான அமேசான் தொழி லாளர்கள்  வேலைநிறுத்தத்தில் பங்கேற்க துவங்கி யுள்ளனர். அமேசான் நிறுவனம் குறைந்த ஊதியம், பாதுகாப்பற்ற வேலை நிலைமைகளை மேம்படுத்த தொழிற்சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த தொடர்ந்து மறுத்து வருகிறது என  டீம்ஸ்டர்ஸ் சங்கம் தெரிவித்துள்ளது.

கியூபாவை முடக்கும்  அமெரிக்காவிற்கு கண்டனம் 

கியூபாவை மீண்டும் பயங்கரவாதத்தை ஆதரிக் கும் நாடுகளின் பட்டியலில் சேர்த்திருக்கும் அமெ ரிக்காவின் முடிவை ரஷ்ய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா ஜாகரோவா கண்டித்துள் ளார். கியூபாவை முடக்குவதற்காக  எடுக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகளும் முற்றிலும் சட்ட விரோதமானது மற்றும் ஐ.நா சாசனத்தின் அடிப்ப டைக் கொள்கைகளை அப்பட்டமாக மீறும் செயல். இந்த மனிதாபிமானமற்ற மற்றும் சட்டவிரோதமான நடைமுறையை நாங்கள் வன்மையாகக் கண்டிக் கிறோம் என்று அவர் கூறியுள்ளார்.