‘நேட்டோ போரில் ஹங்கேரி பங்கேற்காது’
நேட்டோ அமைப்பு ரஷ்யா மீது போர் தொடுத்தால் ஹங்கேரி பங்கேற்காது என்பதை அந்நாட்டு பிரதமர் உறுதி செய்துள் ளார். நேட்டோ அமைப்பின் 75 ஆவது மாநாட்டில் பேசிய பிரதமர் ஓப்ரான் உக்ரை னுக்கு ஆதரவாக நேட்டோ போரிட்டால், அப் போரில் ஹங்கேரி வீரர்கள் பங்கேற்க மாட்டார்கள் என்றார். அதேபோல ஸ்லோ வாக்கியா பிரதமர் ராபர்ட் ஃபிகோ உக்ரைனை நேட்டோ உறுப்பினராக்கக் கூடாது என எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
போரால் இஸ்ரேலில் 46 ஆயிரம் நிறுவனங்கள் மூடல்
இஸ்ரேல் - பாலஸ்தீனப் போர் பாதிப்பின் காரணமாக இஸ்ரேலில் 46 ஆயிரம் நிறுவனங்கள் முற்றிலுமாக மூடப்பட்டு விட்டன. இது அந்நாட்டு பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 35,000 நிறு வனங்கள் (77 சதவீதம்) போர் துவங்கிய போதே மூடப்பட்டு விட்டன. இவை பெரும் பாலும் 5 பேர் வரை பணியாற்றக்கூடிய சிறு, குறு நிறுவனங்கள் தான் எனவும் கூறப்பட்டுள்ளது.
மக்களின் கோபத்தை தூண்டும் கென்ய ஜனாதிபதி
கென்ய ஜனாதிபதி வில்லியம் ரூட்டோவை ராஜினாமா செய்ய வலியுறுத்தி மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.போராட் டத்தில் இருந்து மக்கள் பின் வாங்காத சூழலில், ரூட்டோ பதவி விலகாமல் அமைச்சரவையை மட்டும் மாற்றி மக்களின் கோபத்தை மேலும் அதிக ரித்துள்ளார். ஏகாதிபத்திய ஆதரவுக் கொள்கை களை அமல்படுத்தி மக்களை வறுமையில் தள்ளி வரும் ரூட்டோ ஆட்சிக்கு எதிராக அந்நாட்டு இளை ஞர்கள் பெரும் போராட்டத்தை முன்னெடுத்து வரு வது குறிப்பிடத்தக்கது.
இத்தாலியில் அதிகரிக்கும் சூழலியல் குற்றங்கள்
இத்தாலியில் சூழலியல் குற்றங்கள் அதி கரித்து வருவது தெரியவந்துள்ளது. 2023 ஆம் ஆண்டு 35,487 குற்றங்கள் பதிவு செய் யப்பட்டுள்ளன. இது 2022 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட சூழலியல் குற்றங்களுடன் ஒப்பி டும் போது 15.6 சதவீதம் அதிகமாகும். அந் நாட்டில் வெளியிடப்பட்ட சூழலியல் குற்றத் தரவுகளின் படி குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதை இத்தாலியின் சுற்றுச்சூழல் குழுவான லெகம்பைன்டே (Legambiente) உறுதி செய்துள்ளது.
ரஷ்யா - சீனா போர்ப் பயிற்சி
ரஷ்ய - சீன நாடுகள், சீனாவின் தெற்கு கடற்கரையில் கூட்டு ராணுவப் பயிற்சியை நடத்தி வருகின்றன. ஜூலை முதல் வாரத்தில் துவங்கிய இந்த பயிற்சி ஜூலை பாதி வரை நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் போரை தீவிரமாக்க நேட்டோ திட்ட மிட்டுள்ள நிலையில் அமெரிக்காவின் போர் கூட்டாளிகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் இந்த போர்ப் பயிற்சி முன்னெடுக் கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.