சூடானில் கனமழை : பலி எண்ணிக்கை உயர்வு
சூடானில் பெய்துவரும் கனமழையால் பலியானவர்கள் எண்ணிக்கை 53 ஆக உயர்ந்துள்ளது. சூடானின் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கனமழை காரணமாக ஒன்பது மாநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. 2,000க்கும் மேற்பட்ட வீடுகள் முழுமையாகவும், 4,000 க்கும் மேற்பட்ட வீடுகள் பகுதியளவிலும் இடிந்துள்ளன. இதனால் 9,777 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன 208 படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தொற்றுநோய் பாதிப்புகள் ஏற்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘இஸ்ரேல் நிதியமைச்சர் கைது செய்யப்பட வேண்டும்’
இஸ்ரேல் நிதியமைச்சர் பெசலேல் ஸ்மோட்ரிச்சைக் கைது செய்ய வேண்டும் என சர்வதேச நீதி மன்றத்திடம் பாலஸ்தீன அரசு கோரிக்கை விடுத்துள்ளது. பாலஸ்தீனர்கள் பசியால் பலியாவது நியாயமானது; சரியானது என பெசலேல் சில தினங்களுக்கு முன் இனப்படுகொலையை ஊக்குவித்து பேசினார். இஸ்ரேல் அமைச்சர் இவ்வாறு பேசியது “போர்க்குற்றம்” என ஐ.நா சபையும் குறிப்பிட்டுள்ள நிலையில், அவரை கைது செய்ய வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலுக்கு ராணுவ உதவியை எதிர்க்கும் ஜெர்மன் மக்கள்
இஸ்ரேலுக்கு ஜெர்மனி வழங்கி வரும் ராணுவ உதவியை 68 சதவீத ஜெர்மன் மக்கள் எதிர்த்துள்ளனர். கடந்த மார்ச் மாதம் நடத்தப்பட்ட ஏடிஆர் அமைப்பின் கணக்கெடுப்பின் முடிவில் இது தெரிய வந்துள் ளது. இந்த கணக்கெடுப்பில் லெபனான் ஈரா னுடன் இஸ்ரேல் போரைத் துவங்கினால் ஜெர் மனி உதவக் கூடாது என தெரிவித்துள் ளனர். மேலும் பாலஸ்தீனர்கள் மீதான போரை ஆத ரித்து வந்த ஜெர்மனியர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது எனவும் தெரியவந்துள்ளது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட மக்களை தலைநகரில் தங்கவைக்கும் வடகொரியா\
வடகொரிய ஜனாதிபதி கிம்ஜோங் உன் அந்நாட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்துள்ள மக்களுக்கு அரசு சார்பில் பாதுகாப்பான வீடுகள் கட்டப்படும் என தெரிவித்துள்ளார். மேலும் வீடுகள் கட்டப்படும் வரை நாட்டின் தலைநகரில் மக்கள் தங்குவார்கள் எனவும் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக் கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து சுமார் 15,400 பேர் வட கொரிய தலைநகருக்கு செல்ல உள்ளனர்.
சொந்த நாட்டிற்கு வந்த 17 லட்சம் ஆப்கன் அகதிகள்
கடந்த ஒரு வருடத்தில் பாகிஸ்தான், ஈரான் மற்றும் பிற நாடுகளில் இருந்து மொத்தம் 17,79,603 ஆப்கானிஸ்தான் அகதிகள் ஆப்கானுக்கு திரும்பியுள்ளனர். இதனை அந்நாட்டுகளில் உள்ள அகதிகள் மற்றும் திருப்பி அனுப்பும் அமைச்சகத் தரவுகளில் இருந்து தெரிய வந்துள்ளது. வெளிநாடுகளில் 70 லட்சம் அகதிகளும், ஆப்கானிஸ்தானுக்குள் 30 லட்சம் மக்கள் அகதிகளாகவும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.