ஹமாஸ் தலைவரானார் யாஹ்யா சின்வார்
யாஹ்யா சின்வாரை ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவு தலை வராக நியமிக்கப்பட்டுள்ளார். ஈரான் தலை நகரில் வைத்து இஸ்மாயில் ஹனியேவை இஸ்ரேல் ராணுவம் படுகொலை செய்தது. அவர் கொலை செய்யப்பட்ட சில நாட்கள் கழித்து புதிய தலை வராக யாஹ்யா நியமிக்கப்பட்டுள்ளார். ஹமாஸ் அமைப்பு நட்பு சக்திகளுடனான ஒருங்கிணை ப்பு நடவடிக்கைகளை சின்வார் முறையாக கையாண்டது எதிர்கால நடவடிக்கைகளுக்கு உதவியாக அமையும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
வங்கதேசம் குறித்து பாகிஸ்தான் கருத்து
வங்கதேச மக்களுடன் ஒற்றுமையை வெளிப்படுத்துவதாக பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. அந்நாட்டின் ஆட்சி கவிழ்க்கப்பட்டு 3 நாட்கள் கழித்து வங்கதேசம் குறித்து பாகிஸ்தான் கருத்து தெரிவித்துள்ளது. அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் வங்கதேச மக்க ளின்நெகிழ்ச்சியான மனப்பான்மையும் ஒற்றுமையும் அவர்களை அமைதியான எதிர் காலத்தை நோக்கி அழைத்துச் செல்லும் என்று நாங்கள் நம்புகிறோம் என குறிப்பிட்டுள்ளது.
இலங்கை ஜனாதிபதி வேட்பாளர் ராஜபக்சே மகன்
இலங்கை ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக மகிந்த ராஜ பக்சவின் மகன் நமல் ராஜபக்ச அறிவிக்கப் பட்டுள்ளார். ரணில் விக்கிரமசிங்கே போட்டி யிடுவார் என கூறப்பட்டு வந்த நிலையில் புதனன்று நடந்த பெரமுன கட்சி கூட்டத்தில் நமல் ராஜபக்சே வேட்பாளராக அறிவிக்கப் பட்டுள்ளார். செப்டம்பர் 21 அன்று நடைபெற உள்ள தேர்தலுக்கு ஆகஸ்ட் 15 முதல் வேட்பு மனு தாக்கல் துவங்க உள்ளது.
இங்கிலாந்தில் கலவரம்: வெளிநாட்டினருக்கு எச்சரிக்கை
இங்கிலாந்தில் சிறுமிகள் கொலை செய்யப்பட்ட நிகழ்வில் இஸ்லாமிய அகதி ஒருவருக்கு தொடர்பு உள்ளதாக பொய்ச் செய்தி பரப்பப்பட்டு கலவரம் உருவாக்கப்பட்டது. இதனை தொடர்ந்து 30 க்கும் மேற்பட்ட நகரங்க ளில் இஸ்லாமியர்கள், அகதிகள், கருப்பினத்த வர்கள் மீது குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. பல இடங்களில் தீவைப்புச் சம்பவங்க ளும் நடந்துள்ளன. இதனை தொடர்ந்து இங்கிலாந்து வரும் வெளிநாட்டினருக்கு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
மத்தியகிழக்கு நாடுகளை படுகுழியில் தள்ளும் இஸ்ரேல்
மத்திய கிழக்கில் உருவாகும் போர்ப் பதற்றத்திற்கு இஸ்ரேலே முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும் என ஜோர்டா னின் துணைப் பிரதமரும் வெளியுறவுத்துறை அமைச்சருமான அய்மன் சஃபாடி தெரிவித்துள் ளார். மேலும் காசா மீதான ஆக்கிரமிப்பை தொடர்வது, சர்வதேச சட்டங்களை மீறுவது, நாடுகளின் இறையாண்மை மீது தாக்குதல் நடத்துவது என இஸ்ரேல் முழு மத்திய கிழக்கு பிராந்தியத்தையும் போரின் படுகுழியில் தள்ளுகிறது என்று சஃபாடி விமர்சித்துள்ளார்.