world

img

55 ஆண்டு கால வரலாற்றில் முதல் முறையாக சாம்சங் தொழிலாளர்கள் எழுச்சிப் போராட்டம்

உலகின் முன்னணி ‘மெமரி சிப்’ உற்பத்தி நிறுவன மான  சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறு வனத்தின்  55 ஆண்டு கால வர லாற்றில் முதல் முறையாக ஆயிரக் கணக்கான தொழிலாளர்கள் அடிப்படை உரிமைகளுக்காக  “கால வரையற்ற வேலைநிறுத்தத்தை” துவங்கியுள்ளனர்.

முதலில் 3 நாள் வேலைநிறுத்தம் அறிவித்த தொழிலாளர்கள், தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு நிறுவனத்தை வலியுறுத்தினர். ஆனால் நிறுவனம் ஆணவத்துடன், தொழி லாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த மறுத்து வந்தது.  இதன் காரணமாக தொழிலா ளர்கள், மூன்றாம் நாள் வேலை நிறுத்தத் தன்று காலவரையற்ற வேலை நிறுத்த த்தை துவங்குவதாக அறிவித்தனர்.

வேலைநிறுத்தத்திற்கு தலைமை  தாங்கும் தேசிய சாம்சங் எலக்ட்ரா னிக்ஸ் யூனியன் (NSEU) தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், நமது உறுப்பினர்கள் யாரும் சோர்வடைய வேண்டாம்; அடுத்தகட்ட அறிவிப்பு வரும் வரை வேலைநிறுத்தம் தொடரும் என்று குறிப்பிட்டுள்ளது.  சுமார் 30,000 உறுப்பினர்களைக் கொண்டுள்ள சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சங்கம்  உலகில் உள்ள சாம்சங் தொழிலாளர்களில் சுமார் 24 சதவீத தொழிலாளர்களை   பிரதி நிதித்துவப்படுத்துகிறது.  

அனைத்து தொழிலாளர்களுக்கும் அடிப்படை ஊதியத்தில் குறைந்த பட்சம் 5.6 சதவீதம் உயர்த்த வேண்டும்; ஊதியத்தில் வெளிப்படைத்தன்மை வேண்டும்; வேலைநிறுத்தங்களில் பங்கேற்ற  உறுப்பினர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்; அனைத்து ஊழியர்களுக்கும் ஆண்டு தோறும் ஒரு நாள் ஊதியத்துடன் விடு முறை அளிக்க வேண்டும் என கோரிக்கைகளை முன்வைத்து சாம்சங் தொழிலாளர்கள் தொடர்ந்து போராடி வந்துள்ளனர். சாம்சங் நிர்வாகத்துடன் 2024 ஜனவரி முதல் தொழிற்சங்கம்  பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது .

ஏற்கனவே 6.5 சதவீத ஊதிய உயர்வு  கோரி வந்த தொழிற்சங்கம் நல்ல  முடிவை எட்ட வேண்டும் என்பதற்காக பேச்சுவார்த்தையின் போது  5.6 சதவீத ஊதிய உயர்வை கொடுக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தது.எனினும் நிர்வாகம் தனது சுரண்டல் எண்ணம் காரணமாக 5.1 சதவீதம் மட்டுமே ஊதிய உயர்வு கொடுக்க முடியும் என தெரிவித்தது. இதனை தொடர்ந்தே தொழிலாளர்கள் கொதிப்படைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.