world

img

தீக்கதிர் உலக செய்திகள்

பாக் ராணுவத் தளபதி  பதவிக் காலம் நீட்டிப்பு  

பாகிஸ்தான் அரசு 1952 ஆம் ஆண்டு ராணு வச் சட்டத்தை திருத்தம் செய்துள்ளது. இந்த திருத்தத்தின் மூலம் அந்நாட்டு ராணுவத் தலைமை தளபதியின் பதவிக்காலத்தை மூன்றிலிருந்து 5 ஆண்டுகளாக நீட்டித்துள்ளது. மேலும் இந்த திருத்தம் ராணுவத் தளபதி நியமனம், மறு நியமனம், பணி நீட்டிப்பு, ஓய்வு வயது ஆகியவற்றிற்கு விலக்கு அளிக்கின்றது. நாடாளுமன்றத்தின் இரு அவை களிலும் இந்த திருத்தம் மிக விரைவாக நிறை வேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

காசாவில் மூன்றாம் கட்ட  போலியோ முகாம் முடிந்தது

ஐ.நா  அவையின் உதவியுடன் வடக்கு காசாவில் மூன்றாம் கட்ட போலியோ மருந்து செலுத் தும் முகாம் நடந்து முடிந்துள்ளது. திங்களன்று நடந்து முடிந்த இந்த முகாமில் 94 ஆயிரம் பாலஸ்தீன குழந் தைகளுக்கு போலியோ மருந்து கொடுக்கப்பட்டுள் ளது எனவும் இன்னும் ஆயிரக்கணக்கான குழந்தைக ளுக்கு மருந்து செலுத்த முடியவில்லை எனவும் ஐ.நா. மருத்துவக்குழு தெரிவித்துள்ளது. இதுவரை 79 சத வீத குழந்தைகளுக்கு போலியோ தடுப்பூசி போடப் பட்டுள்ளதாக பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா நிவா ரணம் மற்றும் பணி நிறுவனம்  தெரிவித்துள்ளது.

அர்ஜெண்டினா வெளியுறவுத்துறை  அமைச்சர் மாற்றம்

கியூபா மீதான அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளை நீக்க கோரி ஐ.நா. அவையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை ஆதரித்து அர்ஜெண்டினா தரப்பில் வாக்களித்ததற்காக வெளியுறவுத்துறை அமைச்சர் டயானா மொண்டினோ பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.  இதனைத்தொடர்ந்து ஜனாதிபதி ஜேவியர் மிலேய் புதிய வெளியுறவுத் துறை அமைச்சராக ஜெரார்டோ வெர்தெய்னை நியமித்துள்ளார்.  ஜெரார்டோ இஸ்ரேலின் இனப்படுகொலை ஆதரவாளராகவும், தீவிர வலதுசாரியாகவும் உள்ளார்.

இஸ்ரேல் தாக்குதலால்  குழந்தைகளின் கல்வி பாதிப்பு

லெபனான் குழந்தைகள் கல்வியை தொடர வும் பள்ளிக்கூடம் செல்லவும் வேண்டும். எனவே நிரந்தரமான போர் நிறுத்தம் செய்ய வேண்டுமென   ஐ. நா. சர்வதேச குழந்தைகள் அவசர நிதியம் அழைப்பு விடுத்துள்ளது.இஸ்ரேல் தாக்குத லால் லெபனானில் சுமார் 3,87,000 குழந்தைக ளின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. கல்வி நிலையங்கள் மீதான தாக்குதல்கள் ஒரு தலைமுறையின் கல்வியை மொத்தமாகப் பாதிக்கின்றது. இது குழந்தைகளின் வாழ் விலும் நாட்டின் எதிர்காலத்திலும்  எதிர்மறையான தாக்கத்தை உருவாக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.