சைப்ரசுக்கு ராணுவத்தை அனுப்பியது இங்கிலாந்து
இங்கிலாந்து அரசு சைப்ரஸ் நாட்டுக்கு 700 ராணுவ வீரர்களை அனுப்பியுள்ளது. லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் அங்கிருந்து வெளியேறும் தனது நாட்டு மக்களை அழைத்து வருவதற்காக ராணுவத்தை அனுப்பியதாக தொழிலாளர் கட்சி பிரதமர் ஸ்டார்மர் மழுப்பியுள்ளார். ஆனால் அமெரிக்கா, இஸ்ரேலுடன் இங்கிலாந்தும் இணைந்து ஹவுதி உள்ளிட்ட பாலஸ்தீன ஆதரவு அமைப்புகள் மீது தாக்குதல் நடத்த ராணுவ கூட்டமைப்பை உருவாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
லெபனான் மீதான தாக்குதல்: இஸ்ரேலுக்கு போப் கண்டனம்
லெபனானில் அதிகரித்து வரும் போர்ப் பதற்றத்தை ஏற்றுக்கொள்ள முடி யாது என போப் பிரான்சிஸ் இஸ்ரேலை கண் டித்துள்ளார். லெபனானில் இருந்து வெளிவரும் செய்திகளை கண்டு நான் வருத்தப்படுகிறேன். பயங்கரமாக அதிகரித்து வரும் போரைத் தடுக்க சர்வதேச சமூகம் எல்லா முயற்சிகளையும் எடுக் கும் என்று நான் நம்புகிறேன். லெபனான் மக்க ளுக்கு எனது நெருக்கத்தை வெளிப்படுத்திக்கொள்கி றேன். அவர்கள் ஏற்கனவே மிகவும் பாதிக்கப் பட்டுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கமலா ஹாரிஸ் அலுவலகத்தில் துப்பாக்கிச் சூடு
ஜனநாயக கட்சியின் அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளரான கமலா ஹாரிஸின் தேர்தல் பிரச்சார அலுவலகத்தில் துப்பாக்கிச்சூடு நடந் தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹரிஜோனா மாநிலத்தில் அமைந்துள்ள தேர்தல் பிரச்சார அலுவலகத்தில் தாக்குதல் நடந்துள்ளது. எனி னும் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. டொனா ல்டு டிரம்ப் மீது கொலை முயற்சி தாக்குதல் மேற் கொள்ளப்பட்ட நிலையில் கமலா ஹாரிஸ் அலுவ லகத்தின் மீதான தாக்குதல் அமெரிக்காவின் உள்நாட்டு பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது.
ஐஎம்எப் நிர்வாக இயக்குநர் இலங்கை ஜனாதிபதிக்கு கடிதம்
இலங்கை ஜனாதிபதி அனுர குமார திஸாநா யக்கவிற்கு ஐஎம்எப் நிர்வாக இயக்குநர் கிறிஸ்டாலினா ஜோர்ஜியவே கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அதில் இலங்கைக்கு உறுதியான நண்பனாகவும் அதன் வளர்ச்சிக்கான இலக்குகளை அடையவும் உதவ சர்வதேச நாணய நிதியம் தயாராக உள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் பொருளாதார வீழ்ச்சிக்கு பிரதான காரணமே ஐஎம்எப் கொடுத்த கடனும் விதிமுறைகளும் தான் என்ற குற்றச்சாட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
‘மேற்கு நாடுகள் உக்ரைனை பேச்சு நடத்த அனுமதிக்காது’
போர் நிறுத்தத்தை மேற்கொள்வதற்கான பேச்சுவார்த்தை நடத்த உக்ரைனை மேற்கு நாடுகள் அனுமதிக்காது என ரஷ்யா வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்துள்ளார். ஐநா சட்டங்களின் அடிப்படையில் கூட ரஷ்யாவுடன் நியாயமான பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்கு அவை அனுமதிக்காது எனவும் கூறியுள்ளார். அமைதிப் பேச்சுவார்த்தை மூலம் உக்ரைன் - ரஷ்யா போரை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என சர்வதேச அளவில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.