இஸ்ரேலுக்கு நிலக்கரி: கொலம்பியா தடை
இஸ்ரேலுக்கு நிலக்கரி ஏற்றுமதியை தடை செய்யும் ஆணையை கொலம்பிய அரசு அங்கீகரித்துள்ளது. 50 சதவீதத்துக்கும் அதிகமாக எரிசக்திக்காக இஸ்ரேல் நிலக்கரியையே சார்ந்துள்ளது. மேலும் அந்நாட்டின் நிலக்கரித் தேவையை பூர்த்தி செய்யும் நாடாக கொலம்பியா உள்ள நிலையில், கொலம்பிய நிலக்கரியை வைத்து இஸ்ரேல் ராணுவம் பாலஸ்தீன குழந்தைகளை கொல்ல குண்டுகளை செய்கிறது. எனவே அதற்கு அனுமதிக்கக் கூடாது என கொலம்பிய இடதுசாரி ஜனாதிபதி குஸ்தாவோ பெட்ரோ கூறியுள்ளார்.
பெலாரஸ் எல்லையில் ராணுவத்தை குவித்த உக்ரைன்
பெலாரஸ் - உக்ரைன் எல்லையில் 1,20,000 க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களை நிலை நிறுத்தியது உக்ரைன். இதனை தொடர்ந்து பெலாரஸ், மூன்றில் ஒரு பகுதி ராணுவத்தை எல் லையில் நிலை நிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. ரஷ்யாவின் குர்ஸ்க் பிராந்தியத்தில் தாக்குதல் நடத்துவதற்காக தனது நாட்டின் வான் வெளியில் அத்துமீறி உக்ரைன் நுழைந்ததாக பெலாரஸ் குற்றம் சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. உக்ரைன் ராணுவ டிரோன்கள் பெலாரஸ் எல்லைக் குள் தொடர்ந்து ஊடுருவி வருவது குறிப்பிடத்தக்கது.
குரங்கு அம்மை கொரோனா போன்றதல்ல!
விலங்குகளில் இருந்து மனிதர்களுக்கு பரவி வரும் குரங்கம்மை, கொரோனா தொற்று போன்றதல்ல என உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பிய நாடுக ளுக்கான இயக்குநர் ஹன்ஸ் பத்திரிகையாளர் சந்திப்பின் போது இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் கிளேடு 1 பி வகைக்கு சிகிச்சைய ளிக்கும் போது கிளேடு 2 வகையும் சேர்ந்து கட்டுப்படுத்தப்படுவதாகவும் அவர் குறிப் பிட்டுள்ளார்.
‘எலான் மஸ்கிற்கு அமைச்சர் பதவி’
டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றால் எலான் மஸ்கிற்கு அமைச்சர் பதவி கொடுப்பதாக அறிவித்துள்ளார். ஜனாதிபதி வேட்பாளரான டிரம்பிற்கு ஆதரவாக மிகப்பெரிய கோடீஸ்வரரான எலான் மஸ்க் பிரச்சாரம் செய்து வருகிறார். இதற்காக மாதம் தோறும் 300 கோடி ரூபாய்க்கும் அதிகமாக செலவு செய்து வரு கிறார். இந்நிலையில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் அளித்த பேட்டியில் மஸ்கிற்கு அமைச்சராகவோ, வெள்ளை மாளிகையின் ஆலோசகராகவோ பதவி கொடுப்பேன் என தெரிவித்துள்ளார்.
ஹிஸ்புல்லா தாக்குதலில் இஸ்ரேல் கமாண்டர் பலி
மேற்கு கலிலீ பகுதியில் ஹிஸ்புல்லா அமைப்பினர் நடத்திய தாக்குதலில் இஸ்ரே லை சேர்ந்த மஹ்மூத் அமரியா என்ற 45 வயது டைய ராணுவ கமாண்டர் பலியாகி உள்ளார். காசா மீதான தாக்குதலை முழுமையாக நிறுத்தாமல் இஸ்ரேல் மீதான தாக்குதலை நிறுத்த மாட்டோம் என ஹிஸ்புல்லா அமைப்பினர் தெரிவித்து வரு கின்றனர். இந்நிலையில் இருநாடுகளும் தொடர்ந்து ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தி வருகின்றன.