கீவ்,ஆக.26- உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா பதிலடித் தாக்குதலை நடத்தி யுள்ளது. ஏவுகணைகள், ஆளில்லா விமானங்கள் மூலம் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 3 பேர் பலியாகி யுள்ளனர். உக்ரைனின் மேற்குப் பகுதியில் உள்ள லுட்ஸ்க், கிழக்கு டினிப்ரோ மற்றும் தெற்கு சபோரி ஜியா பகுதிகளில் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக உக்ரைன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் உக்ரைன் படைகள் ரஷ்யப் பகுதிகளுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தி தீவிரமான சேதத்தை உருவாக்கின. இந் நிலையில் இந்தத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக திங்க ளன்று அதிகாலை உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா ஏவு கணை, ஆளில்லா விமானங்கள் மூலமாக தாக்குதல் நடத்தியது.
இந்தத் தாக்குதலில் உக்ரைன் தலைநகரின் மின் உற்பத்தி நிலை யங்கள் குறிவைக்கப்பட்டதாக வும், இதன் காரணமாக உக்ரை னின் பல பகுதிகளில் மின்சாரம் மற்றும் தண்ணீர் விநியோகம் தடைபட்டதாகவும் கீவ் மேயர் விட்டலி கிளிட்ச்கோ தெரிவித்தார்.