world

img

உக்ரைனில் உயிரியல் ஆயுதக் கூடங்கள் அமெரிக்கா ஒப்புதல்

உயிரியல் ஆயுதங்களை பரிசோதனை செய்யும் கூடங்கள் உக்ரைனில் இருப்பது உண்மைதான் என்று அமெரிக்காவின் அரசியல் விவகாரத்துறை செயலாளர்களில் ஒருவரான விக்டோரியா நுலாண்ட் ஒப்புக் கொண்டுள்ளார்.
உக்ரைனில் அமெரிக்காவின் உயிரியல் ஆயுதப் பரிசோதனைக் கூடங்கள் இருப்பதாக ரஷ்யாவும், சீனாவும் குற்றம் சாட்டியிருந்தன. இந்த விவகாரத்தை ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலுக்கும் எடுத்துச் சென்றிருக்கிறார்கள். இது குறித்து விவாதம் நடத்தப்பட வேண்டும் என்ற வேண்டுகோள் முன்வைக்கப்பட்டிருப்பதாக ஐ.நா.சபைக்கான ரஷ்யப் பிரதிநிதி டிமிட்ரி போலியான்ஸ்கி தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் ராணுவத்துறை சார்பாக பல ஆய்வகங்கள் அமைக்கப்பட்டுள்ளது என்பதற்கான ஆவணங்கள் தங்களிடம் இருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. அத்தகைய உயிரியல் ஆயுதப் பரிசோதனைக் கூடங்கள் உடனடியாக அழித்தொழிக்கப்பட வேண்டும். இது உலகம் முழுவதும் உயிரியல் ஆயுதங்களைத் தயாரிக்கும் அமெரிக்கத் திட்டத்தின் ஒரு பகுதியாகவே அமைந்திருக்கிறது என்று போலியான்ஸ்கி குற்றம் சாட்டியுள்ளார். இந்த விவகாரத்தை பாதுகாப்பு கவுன்சில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளவிருக்கிறது.
சீனா அதற்கும் ஒரு படி மேலே போயிருக்கிறது. சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளரான ஜாவோ லிஜியான் பேசுகையில், "பரிசோதனைக் கூடங்கள் எப்படி இயங்கும் என்பது அமெரிக்காவுக்கு நன்றாகவே தெரியும். அங்கு சேமித்து வைக்கப்பட்டுள்ள வைரஸ்கள் மற்றும் அதன் மீதான ஆய்வுகள் பற்றிய விபரங்களை எவ்வளவு சீக்கிரம் வெளியிட முடியுமோ அவ்வளவு சீக்கிரமான வெளியிட வேண்டும். உலகம் முழுவதும் 30 நாடுகளில் 336 அபாயமான ஆய்வுக்கூடங்களை அமெரிக்கா வைத்திருக்கிறது" என்று குறிப்பிட்டார்.
உயிரியல் ஆயுத பரிசோதனைக் கூடங்கள் குறித்த குற்றச்சாட்டுகளை "நகைப்புக்குரியது" என்று அமெரிக்கா குறிப்பிட்டது. ஆனால், அடுத்த நாளே உண்மை அம்பலமாகியது. அமெரிக்க செனட் அவையின் சர்வதேச உறவுகள் குழுக்கூட்டத்தில், அரசியல் விவகாரத்துறை செயலாளர்களில் ஒருவரான விக்டோரியா நுலாண்ட், உக்ரைனில் உயிரியல் ஆயுதப் பரிசோதனைக் கூடங்கள் இருப்பது உண்மைதான் என்று ஒப்புக் கொண்டுள்ளார். இதனால் பரிசோதனைக் கூடங்கள் பற்றி விவாதிக்க ஐ.நா.சபையின் பாதுகாப்பு கவுன்சில் தனிக்கூட்டம் கூட்டுவதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.