world

img

ஜோ பைடனின் கட்டளைக்கு ஏற்ப ராணுவ நடவடிக்கை

வாஷிங்டன்,ஜன.30-  ஜனாதிபதி ஜோ பைடனின் உத்தரவுக்கு ஏற்ப ராணுவ நடவடிக்கையில் ஈடுபடுவோம் என   அமெரிக்க பாதுகாப்பு செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி தெரிவித்துள்ளார்.   ஜோர்டானில் பாலஸ்தீன ஆதரவு குழுக்கள், அமெரிக்க ராணுவத் தளம் மீது நடத்திய ஆளில்லா விமான தாக்குத லில் மூன்று வீரர்கள் மரணமடைந்தனர்.

மேலும் 30 முதல் 40 க்கும் மேற்பட்ட வீரர்கள் பலத்த காயமடைந்துள்ளனர்.   பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் தாக்குதலை துவங்கி யதில் இருந்து இஸ்ரேலின் இனப்படுகொலைக்கு முழு ஒத்துழைப்பை வழங்கி வருகிறது அமெரிக்கா. இதனால் மத்தியகிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது பாலஸ்தீன ஆதரவு குழுக்கள் தொடர் தாக்கு தலை நடத்தி வருகின்றன. இதனால் இரு தரப்பும் அறி விக்கப்படாத போரில் ஈடுபட்டு வருகின்றன. இந்த தாக்குதல்களுக்கு எல்லாம் ஈரான் தான் காரணம்  என  அமெரிக்கா தொடர்ந்து  குற்றம் சாட்டுகிறது.

ஆனால் ஈரான் அரசு அவை ஆதாரமற்ற குற்றச்சாட்டு  என மறுத் துள்ளது.  ஏமனின் ஹவுதி அமைப்பு செங்கடல் பகுதியில் நடத்தி வரும் தாக்குதல் அமெரிக்காவிற்கு பெரும் சவாலாக உள்ளது. இந்த தாக்குதலால் கடல் போக்குவரத்து முடங்கி யுள்ள சூழலில் அது அமெரிக்கா உட்பட பல நாடுகளின் பொருளாதாரத்தில் நேரடித் தாக்கத்தை உருவாக்கி வரு கிறது. இந்நிலையில் ஈரான் மீதும் நேரடி போர் அறிவிப்பு செய்வதால் மத்திய கிழக்கு நாடுகள்  முழுவதும் தீவிரமான போர் பரவும்.

 இந்நிலையில், பைடன் நம்மை மூன்றாம் உலகப் போரின் விளிம்பில் கொண்டு வந்து நிறுத்தியுள்ளார். அவரது தலைமையில் நம்மால் வாழ முடியாது  என முன்னாள் ஜனாதிபதி டிரம்ப்  விமர்சித்துள்ளார்.  எனினும்   அமெரிக்காவில் பொது தேர்தல் நடைபெற உள்ள சூழலில்  இது  பைடனுக்கு பெரும் அரசியல் அழுத்தமாக உள்ளது. ஜோர்டானில் தாக்குதல் நடைபெற்ற பிறகு அமெரிக்கா வின் வெள்ளை மாளிகை பாதுகாப்பு கவுன்சிலின் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி,  செய்தியாளர் சந்திப்பில்,  “நாங்கள் மற்றொரு போரை விரும்பவில்லை,பதற்றத்தையும் அதிக ரிக்க விரும்பவில்லை.

எனினும் எங்களை பாதுகாத்துக் கொள்ள தேவையானதை செய்வோம்.  இந்தத் தாக்கு தல்களுக்குத் தகுந்த பதிலடி கொடுப்போம்” என்று  தெரி வித்துள்ளார்.  இந்த பதற்ற சூழலுக்கு மத்தியில் பைடன் தனது தேசிய பாதுகாப்புக் குழுவை இரண்டு முறை சந்தித்துப் பேசியுள்ளார்.மேலும் அவரது கட்டளையின் அடிப்படையில் அமெரிக்கா அடுத்த ராணுவ நடவடிக்கைக்குச்  செல்லும் என கிர்பி கூறியுள்ளார்.