world

img

அந்நிய நாடுகளின் ராணுவத்தை வெளியேற்ற இராக் முனைப்பு

பாக்தாத், பிப்.12-  இராக்கின் நாடாளுமன்ற சபாநாயகர் மொஹ் சென் அல்-மண்டலாவி, அந்நிய நாடுகளின் ராணுவங்களை நாட்டில் இருந்து வெளியேற்ற 2020 ஆம் ஆண்டு அந்நாட்டு நாடாளுமன்ற த்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை  நடை முறைப்படுத்த  அழைப்பு விடுத்துள்ளார்.

மேலும் படைகளை அகற்ற முன்மொழியப்பட்ட தீர்மா னத்துக்கு ஆதரவாக  100 க்கும் மேற்பட்ட  நாடாளு மன்ற பிரதிநிதிகள் கையெழுத்திட்ட கோரிக்கையை யும் அவர் சமர்ப்பித்துள்ளார். இஸ்ரேல் பாலஸ்தீனர்களை இனப்படு கொலை செய்யும் போரில் ஈடுபட்டு வரும் நிலை யில் மத்திய கிழக்கு நாடுகள் முழுவதும் பதற்றங் கள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் அந்நாடுக ளிலும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் உடனான சர்வதேச உறவுகளில் முரண்பாடுகளும் அவ்வப் போது எழுந்து வருகிறது.

இந்நிலையில் இராக்கில் உள்ள அமெரிக்கா தலைமையிலான சர்வதேச ராணுவ கூட்டணி,  இராக் அரசுடன்  புதிய உடன் படிக்கை எதுவும் ஏற்படுத்தாத நிலையில் ராணுவத்தை வெளியேற்ற முடிவு செய்துள்ளது இராக் அரசு. இராக் மற்றும் சிரியாவில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் தொடர்ந்து அந்நாடுகளில் உள்ள பாலஸ்தீன ஆதரவு  குழுக்களையும் அதன்  தலை வர்களையும் குறிவைத்து தாக்குகிறது. பிப்ரவரி முதல் வாரம் அமெரிக்க விமானப் படை நாடு முழுவதும் 85 இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது.

இதில் பொதுமக்கள் உட்பட 17 பேர் படுகொலையானார்கள்  மற்றும் 20 க்கும் அதிகமான மக்கள் படுகாயமடைந்தனர். அதற்கு அடுத்து ஆக்கிரமிப்பு எதிர்ப்புக் குழு தலைவர்  அபு பக்கீர் அல்-சாதி படுகொலை செய்யப்பட்டார்.  இராக் எல்லைக்குள் நடக்கும் இந்த தாக்குதல்க ளை எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள இயலாது என கண்டனம் தெரிவித்த மண்டலாவி, இது இராக்கின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பை  கேள்விக் குறியாக்கியுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

   2020 ஆம் ஆண்டு ஈரான் தளபதி காசிம் சுலை மானியை அமெரிக்கா சட்டவிரோதமாக இராக் விமானநிலையத்தில் படுகொலை செய்ததைத் தொடர்ந்து இராக் நாடாளுமன்றம் அமெரிக்கப் படைகளை தனது எல்லையில் இருந்து வெளியேற் றும் தீர்மானத்தை கொண்டு வந்தது.  குறிப்பாக 2014 ஆம் ஆண்டு ஐஎஸ் ஐஎஸ் தீவிரவாத அமைப் பிற்கு எதிரான நடவடிக்கைகளுக்கு உதவுவதாக அமெரிக்கா உடன் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்ய வலியுறுத்தப்பட்டது.

 (மத்திய கிழக்கு நாடுகளில் தனது ராணுவத்தை வைத்து எண்ணெய் வளங்களை திருட அமெரிக்காவால் தான் இந்த தீவிரவாத அமைப்பு உருவாக்கப்பட்டது.)  2020 ஆம் ஆண்டு இந்த தீர்மானம் நிறை வேற்றப்பட்ட போதும் அதை அமல்படுத்த முயன் றால் இராக் மீது பொருளாதார தடைகளை விதிப் பேன் என அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மிரட்டல் விடுத்தது குறிப்பிடத்தக்கது.

மத்திய கிழக்கு நாடுகளில் போர்ப் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில்  இராக் எடுத்துள்ள முடிவு  அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிரான சர்வதேச அரசியல்  முக்கியத்துவம் வாய்ந்த நடவ டிக்கையாக உள்ளது.