world

img

நேதன்யாகுவை கைது செய்ய சர்வதேச நீதிமன்றம் உத்தரவு

நியூயார்க்,நவ .22- பாலஸ்தீனர்கள் மீதான இனப்படு கொலை மற்றும் சர்வதேச போர் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் இஸ்ரேல் மீது தென்னாப்பிரிக்கா தொடுத்த வழக்கின் தீர்ப்பாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன் யாகு, இஸ்ரேல் முன்னாள் பாதுகாப்பு துறை அமைச்சர் யோவ் காலண்ட், ஹமாஸ் தலைவர் முகமது டீஃப் ஆகியோரை கைது செய்ய சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டது.  இந்த உத்தரவிற்கு இத்தாலி, ஐரோப்பிய ஒன்றியம், துருக்கி உள்ளிட்ட நாடுகள் ஆதரவும், அமெரிக்க அர்ஜெண்டினா எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இத்தாலி 

ரோசெட்டோ சர்வதேச குற்றவியல் நீதி மன்றத்தின்  கைது உத்தரவிற்கு  முதலில் எதிர்ப்பு தெரிவித்தார். எனினும் நேதன்யாகு, காலண்ட் உள்ளிட்ட குற்றம்சாட்டப்பட்டுள்ள வர்கள் அந்நாட்டிக்குள் வந்தால்  நீதி மன்றத்தின் உத்தரவுகளை அமல்படுத்த (கைது செய்ய)  இத்தாலி  கடமைப்பட்டி ருக்கும் என்பதை உறுதிப்படுத்தினார். ஐரோப்பிய ஒன்றியம்  ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுக் கொள்கைத் தலைவர் ஜோசப் பொரெல் நீதிமன்றத்தின்  உத்தரவு அரசியல் சார்ந்தது அல்ல, இந்த உத்தரவு மதிக்கப்பட்டு செயல்படுத்தப்பட வேண்டும். இது ஒரு  கூட்டு முடிவு. ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் உட்பட சர்வதேச நீதிமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து உறுப்பு நாடுகளும் நேதன்யாகு,முன்னாள் இஸ்ரேல் பாது காப்புத் துறை அமைச்சர் காலண்ட் ஆகி யோரை கைது செய்ய வேண்டும் என்று அறிவித்துள்ளன.   துருக்கி பாலஸ்தீனர்களை இனப்படுகொலை செய்த இஸ்ரேல் அதிகாரிகளை நீதிக்கு  முன் நிறுத்துவதில் சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவு நம்பிக்கை தருகிறது. இது ஒரு முக்கியமான நடவடிக்கை என்றும் இந்த உத்தரவை அமல்படுத்த செயல்படுவோம் என்றும் துருக்கி வெளியுறவு துறை  அமைச்சர் ஹக்கன் ஃபிடன் தெரிவித்துள் ளார்.  மேலும் தென்னமெரிக்கா, பெல்ஜியம், ஜோர்டான், ஹமாஸ், பாலஸ்தீன மக்கள், பாலஸ்தீன அதிகார சபை,  மனித உரிமைகள் கண்காணிப்பகம், சர்வதேச மன்னிப்புச் சபை (Amnesty International) ஆகியவை இந்த முடிவை வரவேற்றுள்ளன.

தீர்ப்பிற்கு எதிர்ப்பு

இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு இந்த முடிவை ஏற்க மறுத்துள்ளார்.  இஸ்ரேலுக்கு எதிரான இந்த முடிவை அமெரிக்க அர சாங்கம் நிராகரிப்பதாக வெள்ளை மாளிகை யின் செய்தித் தொடர்பாளர் கரீன் ஜீன்-பியர்தெரிவித்துள்ளார்.  அமெரிக்காவின் தீவிர விசுவாசியாக உள்ள அர்ஜெண்டினா ஜனாதிபதி ஜேவியர்  மிலேய் ஜனாதிபதி  இந்த முடிவோடு  கருத்து வேறுபாடு இருப்பதாக அறிவித்துள்ளார்.  மேலும் இஸ்ரேலின் இனப்படுகொலையை நியாயமானது எனவும் இந்த உத்தரவை ஏற்க மறுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.   ஹங்கேரி பிரதமர் விக்டர் ஓப்ரான் இந்த தீர்ப்பை எதிர்ப்பதுடன் நேதன்யாகுவை அந்நாட்டிற்கு வர அழைப்பு விடுத்துள்ளார்.