ஜெருசலேம்,ஆக.29- இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள மேற்கு கரை யில் 100 க்கும் மேற்பட்ட போர் விமானங்கள், ட்ரோன்கள், புல்டோசர்கள் மற்றும் ராணுவ வீரர் களை ஆகஸ்ட் 27 அன்று ராணுவ நடவடிக்கை யில் ஈடுபடுத்தியுள்ளது இஸ்ரேல்.
இது 2002 ஆம் ஆண்டுக்குப் பிறகு நடைபெற்ற மிகப்பெரிய ராணுவ நடவடிக்கை என இஸ்ரேல் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மேற்கு கரையில் தினந்தோறும் பாலஸ் தீன மக்கள் பல்வேறு சோதனைகளுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். அவர்களின் வீடு களை இடிப்பது, விவசாய நிலங்களை அழிப் பது, எந்த காரணமும் இன்றி கைது செய்வது, குழந்தைகளை சுட்டுக்கொல்வது என இஸ்ரேல் ராணுவம் பயங்கரவாத நடவ டிக்கையில் ஈடுபட்டு வருகிறது. தற்போது மேற்கு கரையில் உள்ள பாலஸ்தீன ஆதரவு ஆயுதக்குழுக்களை அழிப்பதற்காக இந்த ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.
மேற்குக் கரைக்கு வடக்கே துல்கர்ம் நகரில் உள்ள நூர் ஷம்ஸ் அகதிகள் முகா மில் உள்ள பாலஸ்தீனர்களை முகாமை காலி செய்து வெளியேற வேண்டும் என ஆயுத முனையில் விரட்டியுள்ளனர்.
காசாவைப் போல, மேற்கு கரையிலும் பாலஸ்தீனர்களை அகதிகள் முகாமில் இருந்து வெளியேற்ற வேண்டும், அதற்கு தேவையான எந்த நடவடிக்கையையும் எடுப்போம், என்ன செய்தேனும் போரில் வெற்றி பெற வேண்டும் என இஸ்ரேல் வெளி யுறவுத்துறை அமைச்சர் காட்ஸ் தனது ட்விட்டர் எகஸ் தளத்தில் எழுதியுள்ளார்.
இந்த ராணுவ நடவடிக்கை பல நாட்க ளுக்கு தொடரும் என்று ராணுவத் தரப்பு செய்திகளும், இஸ்ரேல் ஊடகங்களும் கூறுகின்றன. ராணுவ நடவடிக்கை துவங்கிய 24 மணி நேரத்தில் 10 க்கும் மேற்பட்டோரை இஸ்ரேல் ராணுவம் சுட்டுக்கொலை செய் துள்ளது. இதன் மூலம் மேற்கு கரையில் கடந்த 11 மாதங்களில் இஸ்ரேல் ராணுவத் தால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 660 ஐ கடந்துள்ளது.
மேலும் பொதுமக்கள், மருத்துவ ஊழி யர்களை கடுமையாக சித்ரவதை செய்வது, மனித உரிமைகளை மீறுவது, இளைஞர்க ளை எந்த காரணமும் இன்றி அடைத்து வைப்பது, பொது மக்களின் வீடுகளைப் பறித்து ராணுவ முகமாக மாற்றுவது என அட்டூழியம் செய்து வருகிறது இஸ்ரேல் ராணுவம்.