வாஷிங்டன்,அக்.20- இஸ்ரேல், உக்ரைன் நாடுகள் போரைத் தொடந்து நடத்த இரு நாடுகளுக்கும் நிதி உதவி வழங்க அமெரிக்க நாடாளு மன்றத்தின் அனுமதியை கோரவுள்ளதாக ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். இஸ்ரேல், காசா மீது கொடூரமான தாக்குதலை நடத்திவரும் நிலையில் புதன் கிழமையன்று இஸ்ரேல் சென்ற பைடன், இஸ்ரேலின் போருக்கு முழு உதவியை யும் அமெரிக்கா செய்யும் என உறுதி யளித்தார். இதனை தொடர்ந்து வெள்ளி யன்று அமெரிக்க மக்களிடம் தேசிய தொலைக்காட்சி வழியாக உரையாற்றிய பைடன் போர் உதவிகள் செய்ய நாடாளு மன்ற குழுவிற்கு அவசர பட்ஜெட் கோரி க்கை அனுப்ப உள்ளதாக கூறியுள்ளார். உக்ரைனுக்கு நீண்ட நாட்களுக்கு போர் உதவி செய்ய இயலாது என வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி அக்டோபர் 11 அன்று அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருந்த நிலையில், உக்ரைனுக்கு உதவி செய்வதை நிறுத்த அமெரிக்கா விரும்பவில்லை என கூறி இரு நாடு களையுமே போரில் தீவிரமாக ஈடுபடுத்தும் நடவடிக்கைக்கு பைடன் தயாராகியுள்ளார். இது அமெரிக்காவின் தேசிய பாது காப்பு சம்பந்தப்பட்ட விஷயம் எனவும் உக்ரைனுக்கான (போருக்கு செய்யும்) உதவி என்பது எதிர்கால சந்ததியினருக்கு லாபப் பங்கை வழங்கும் “ஸ்மார்ட் முதலீடு” எனவும் பைடன் இந்த போர்களை தூண்டி விடுவதற்கு நியாயம் கற்பித்துள்ளார். போருக்கு கூடுதல் நிதியாக நாடாளு மன்ற குழுவிடம் இருந்து உக்ரைனுக்கு 6000 கோடி டாலர்களும் இஸ்ரேலுக்கு 1400 கோடி டாலர்களும் கேட்கப்பட இருப்ப தாக தகவல் வெளியாகியுள்ளது. இதை யடுத்து அமெரிக்க ஆயுத உற்பத்தி யாளர்களின் நலனுக்காகவே பைடன் இவ்வாறு போருக்கு உதவுகிறார் என கடும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.