world

img

‘ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு அல்ல’

ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு அல்ல என துருக்கி நாட்டின் நாடாளு மன்றத்தில் புதன் கிழமை யன்று  ஜனாதிபதி  எர்டோ கன் கூறினார். அவரது உரையில்  ஹமாஸ் ஒரு பயங்கரவாதக் குழுஅல்ல, அவர்கள் தங்களின் நிலத்தைப் பாதுகாக்கும் போராட்டத்தை நடத்தும் ஒரு விடுதலை அமைப்பு  என்று குறிப்பிட்டுள்ளார்.

துருக்கி  நாடாளுமன்றத் தில் எர்டோகன் ஆற்றிய இந்த உரையில், இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் போர் நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியதோடு மத்திய கிழக்கு பிராந்தி யத்தில் நிலையான சமாதா னத்தை ஏற்படுத்த முஸ்லிம் நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என வும்  காசா மீதான தாக்குதல் களை நிறுத்த இஸ்ரேலுக்கு உலக நாடுகள்  அழுத்தம் கொடுக்க வேண்டும்  என்றும் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் அவர் “இஸ்ரேல் மற்றும் உலக நாடுகளுக்கு ஒரு வேண்டு கோள் வைக்கிறேன். இஸ்ரேலுக்கு மேற்குலக  நாடுகள்  நிறைய கடன்பட் டுள்ளன.எனவே ஹமாஸை பயங்கரவாத அமைப்பாக நீங்கள் கருத லாம்.ஆனால் துருக்கி  உங்க ளுக்கு கடன்பட்டிருக்க வில்லை. ஹமாஸ் ஒரு பயங்கரவாத அமைப்பல்ல, தங்கள் நிலங்களைக் காக்கப் போராடும் முஜா ஹிதீன் குழு!  (விடுதலை அமைப்பு)” என கூறினார். மேலும் மனிதாபிமான உதவிக்காக ரஃபா எல்லை திறக்கப்பட வேண்டும். போரை விரைந்து முடி வுக்கு கொண்டுவர  வேண் டும் எனவும் எர்டோகன் வலி யுறுத்தினார்.