உலகம் முழுவதும் மக்கள் போராட்டம்
டெல் அவிவ்/காசா, ஜன. 16 - இஸ்ரேல் - அமெரிக்க ராணுவக் கூட்டணியானது, பாலஸ்தீனம் மீது கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக பெரும் இன அழிப்பை நடத்திக் கொண்டிருக்கிறது. இதுவரை குழந்தைகள், பெண்கள் உட்பட சுமார் 28 ஆயிரம் பேரை கொன்று குவித்துள்ளது. அப்படியும் ரத்தவெறி அடங்காத இஸ்ரேல் - அமெரிக்க ராணு வக் கூட்டணி தற்போது யுத்தத்தை விரிவுபடுத்த ஆரம்பித்துள்ளது. லெபனான், ஈரான் நாடுகள் மீதும் தாக்குதலை நடத்தத் துவங்கி யுள்ளது. லெபனான், ஈரான் நாடு களையும் யுத்தத்திற்குள் அமெரிக்கா இழுந்துள்ளது. இத னால் மத்திய கிழக்கு நாடுகளில் நாளுக்கு நாள் போர்ப் பதற்றம் அதி கரிக்க துவங்கியுள்ளது.
கொன்று குவிக்கப்பட்ட பாலஸ்தீனர்கள்
நூற்றிரெண்டு நாட்களாக இஸ்ரேல் நடத்தி வரும் இனப்படு கொலையில் 27 ஆயிரத்துக்கும் அதி கமான பாலஸ்தீனர்கள் படு கொலை செய்யப்பட்டுள்ளனர். 61 ஆயிரத்துக்கும் அதிகமானோர் படு காயமடைந்துள்ளனர். பெண்களும் குழந்தைகளும் ஐம்பது சதவிகி தத்துக்கும் அதிகமாக இஸ்ரேலால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மேற்கு கரையிலும் 350-க்கும் மேற் பட்ட பாலஸ்தீனர்களை இஸ்ரேல் கொலைசெய்துள்ளது. 355 குழந் தைகள் 200 பெண்கள் உட்பட 5 ஆயி ரத்து 875 பாலஸ்தீனர்களை மேற்கு கரையில் இஸ்ரேல் ராணுவம் கைது செய்து அடக்குமுறை ஏவியுள்ளது. 90 சதவிகிதமான மக்கள் காசாவில் வலுக்கட்டாயமாக இடம்பெயரச் செய்யப்பட்டுள்ளனர்.
பாதுகாப்பு முகாம்கள்- பள்ளிகள், மருத்துவமனைகள் அழிப்பு
45-56 சதவிகிதமான கட்டடங்கள் குண்டுவீசி அழிக்கப்பட்டுவிட்டன. 36 மருத்துவமனைகளில் 15 மட்டுமே ஓரளவிற்கு குறைந்தபட்ச சிகிச்சை நடத்தும் வகையில் உள் ளது. இஸ்ரேல் ராணுவம் 100 நாட் களில் 29 ஆயிரம் குண்டுகளை காசா மீது வீசியுள்ளது. இதில் தடை செய் யப்பட்ட வெள்ளை பாஸ்பரஸ் குண்டுகளும் அடங்கும். ஐநா பாது காப்பு முகாம்களாக இருந்த பள்ளி கள் 69 சதவீதத்திற்கும் அதிகமான தரைமட்டமாக்கப்பட்டு உள்ளன. 142 மசூதிகள், 3 தேவாலயங்கள் அழிக்கப்பட்டுவிட்டன. 121 ஆம்புலன்ஸ்கள் குண்டுவீசி அழிக்கப்பட்டுவிட்டன. தற்போது வெறும் 6 ஆம்புலன்ஸ்கள் மட்டுமே அங்கு இயங்குகின்றன.
20 லட்சம் பேருக்கு உணவில்லை
கிட்டத்தட்ட 20 லட்சம் பாலஸ்தீனர்கள் பஞ்சத்தை எதிர்கொண்டு வருகின்றனர். சில மைல் தூரத்தில் உணவு பொருள்கள் இருந்தும் மக்களை, பட்டினி சாவுக்கு இழக்கும் நிலை நீடிப்பதாகவும் ஒவ்வொரு மணிநேரமும் கணக் கில்லாத உயிர்களை இடரில் வைத்திருப்ப தாகவும் உலக உணவு திட்டத்தின் இயக்குநர் தெரிவித்துள்ளார். உலக உணவுத் திட்டம், யூனிசெப் மற்றும் உலக சுகாதார நிறுவனங் களும், காசாவுக்கு வாழ்வாதார பொருட்கள் விரைவில் கிடைக்க வலியுறுத்தியுள்ளன. வடக்கு காசாவுக்கு 40 கி.மீ. தொலைவில் உள்ள இஸ்ரேலின் துறைமுகமான அஷ்தோட் துறை முகத்தைப் பயன்படுத்த அனுமதி அளிக்கு மாறு ஐ.நா. அமைப்புகள் இஸ்ரேலிடம் கோரியுள்ளன. ஆனால், வாழ்வாதார பொருட்களின் விநி யோகம் பாதிக்கப்படுவதற்கு ஐ.நா.தான் காரணம் என பழியை இஸ்ரேல் அப்படியே திருப்பிப் போட்டுள்ளது. ஐ.நா.விடம் போது மான பணியாளர்களோ, நெறிமுறையோ இல்லை என இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது.
சுகாதார நெருக்கடியால் திணறும் காசா
பிணங்களாலும், மருந்து உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை கொண்டு செல்ல விடாமல் இஸ்ரேல் தடைசெய்து வருவதாலும் காசாவில் பெரும் சுகாதார நெருக்கடி ஏற் பட்டுள்ளது. மயக்க மருந்துகள் இல்லாமல் குழந்தைகள் பெண்கள் என அனைவருக்கும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. இந்த மோசமான சுகாதார சூழலில்தான் நாள் தோறும் 180 பெண்களுக்கு ஆபத்தான முறை யில் பிரசவம் நடக்கிறது. இந்த உண்மைகளை வெளியுலகிற்கு கொண்டு சென்று வந்த பத்திரிக்கையாளர்களையும் 100 பேரை இஸ்ரேல் கொன்று குவித்துள்ளது. இதற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங் கள் வெடித்துள்ளன.
உலகம் முழுவதும் மக்கள் போராட்டம்
குறிப்பாக, 2023 அக்டோபர் 7 அன்று பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் தொடுத்த அநியாயமான போரின் 100-ஆவது நாளில் இஸ்ரேல் - அமெரிக்க கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து, உலகம் முழுவதும் லட்சக் கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மலேசியா, தென்னாப்பிரிக்கா, இங்கி லாந்து, இந்தோனேசியா, தாய்லாந்து, ஜப்பான், இத்தாலி, கிரீஸ் மற்றும் பாகிஸ்தான், ஜெர்மனி ஆகிய நாடுகளில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்ற மாபெரும் பேரணிகளும் போராட்டங் களும் நடைபெற்றன. மலேசியா மலேசிய தலைநகர் கோலாலம்பூரில், இஸ்ரேலின் இனப்படுகொலை கூட்டாளியான அமெரிக்காவின் தூதரகத்திற்கு வெளியே மக்கள் ஒன்று கூடி அமெரிக்காவிற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இனப்படுகொலையை நிறுத்த வேண்டும், குழந்தைகள் மீது குண்டு வீசுவது தற்காப்பு அல்ல என்று எழுதப்பட்ட பதாகைகளை கையில் ஏந்தி, போர் நிறுத்திற்கான ஐ.நா. தீர்மானத்தை, அமெரிக்கா வீட்டோ செய்து நிராகரித்ததை கண்டித்தனர்.
இந்தோனேசியா
இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு வெளியே ஆயிரக்கணக்கான மக்கள் இந்தோனேசிய மற்றும் பாலஸ்தீன கொடிகளுடன் ஒன்று கூடி “இஸ்ரேலை புறக்கணிக்க வேண்டும் எனவும் போர் நிறுத்தத்தை கொண்டுவர வேண்டும் என்றும் பதாகைகளுடன் போராடினர்.
தென்னாப்பிரிக்கா
சர்வதேச நீதிமன்றத்தில் இஸ்ரேலுக்கு எதிரான தென்னாப்பிரிக்காவின் இனப்படு கொலை வழக்கு விசாரணையின்போது அதற்கு ஆதரவாகவும் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா வை கண்டித்து தென்னாப்பிரிக்கா தலைநகர் ஜோகன்னஸ்பர்க்கில் அமெரிக்க தூத ரகத்திற்கு வெளியே மக்கள் கூடி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இங்கிலாந்து
லண்டனில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு பேரணி நடத்தினர். அப்போது பேட்டி யளித்த பாலஸ்தீன இளைஞர் இயக்க உறுப்பி னர் ஜெனின் அக்டோபர் 7 முதல் ஒவ்வொரு வாரமும் நாங்கள் தெருக்களில் இறங்கி போராடி வருகிறோம் என்றார். இங்கிலாந்து நாட்டின் மக்கள் பெரும்பாலும் போர்நிறு த்தத்தை ஆதரிக்கின்றனர். ஆனால் அந்நாட்டு அரசியல்வாதிகள் இனப்படுகொலைக்கு தொடர்ந்து நிதி அளித்து ஆதரவளித்து வரு கின்றனர் என கூறினார். மேலும் பாலஸ்தீனம் சுதந்திரம் பெறும் வரை நாங்கள் தொடர்ந்து தெருக்களில் இறங்கி போராடி அரசுகளுக்கு தொடர் அழுத்தங்களை கொடுப்போம் என்று அவர் கூறினார்.
ஜெர்மனி
ஜெர்மனியில் கம்யூனிஸ்ட் தலைவர்கள் ரோசா லக்சம்பர்க்-லெனின்-லிபெக்னெக்ட்டின் வருடாந்திர நினைவேந்தலின் போது பாலஸ்தீனக் கொடியை ஏந்தி பாலஸ்தீனத் துடன் இருக்கிறோம் என்பதை காட்டும் ஒற்று மைப் பேரணி நடத்தின. இதற்காக கம்யூ னிஸ்ட் கட்சி உறுப்பினர்களை போலீசார் கொடூர மாக தாக்கினர்.
அமெரிக்கா
அதே போல அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டன், நியூயார்க் மற்றும் பிற அமெரிக்க நகரங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்றிணைந்து போர் நிறுத்த வலியுறுத்தியும் அமெரிக்காவின் இனப்படுகொலை ஆதரவை கண்டித்தும் பேரணி நடத்தினர்.
மத்திய கிழக்கில் அதிகரிக்கும் பதற்றம்
மக்களின் போராட்டங்கள் ஒருபுறமிருக்க, அமெரிக்க- இஸ்ரேல் கூட்டணி தற்போது, பாலஸ்தீனத்தைத் தாண்டி, லெபனான், ஈரான் ஆகிய நாடுகளிலும் தாக்குதலைத் துவங்கி நடத்தி வருவதால், இந்த நாடுகளில் உள்ள குழுக்கள் ஆயுதப் போராட்டத்தை கையில் எடுத்து பதிலடி கொடுக்க ஆரம்பித்துள்ளன. இராக்கில் இருந்து அமெரிக்கா மற்றும் வெளிநாட்டு படைகள் வரும் காலத்தில் வெளி யேற்றப்படுவார்கள் என அந்நாட்டு பிரதமர் அறிவித்த சில தினங்களில் அமெரிக்கா 1500 ராணுவ வீரர்களை இராக் மற்றும் சிரியா விற்கு அனுப்பி போர் பதட்டத்தை தீவிரப்படுத்தி வருகிறது. இது 2008 ஆம் ஆண்டு அனுப்பி யதை விட அதிகம். இதற்கு தற்போது ஹவுதி, ஹிஸ்புல்லா அமைப்புகள் பதிலடி கொடுக்கத் துவங்கியுள்ளன.
இஸ்ரேல் உளவுக் கட்டடம் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்
ஈரானில் சுலைமானி நினைவு தினத்தில் நடைபெற்ற இரட்டை குண்டு வெடிப்பிற்கு பிறகு, ஈராக்கில் தன்னாட்சி பெற்ற பிராந்தி யமாக விளங்கும் குர்திஸ்தானில் அமைந்துள்ள இஸ்ரேல் - அமெரிக்காவின் மொசாட் உளவு அலு வலகம் மீது ஈரான் ஏவுகணை வீசி அதிரடி தாக்கு தலை நடத்தியுள்ளது. ஈரானின் பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதல்களால் அமெரிக்கா கடும் அதிர்ச்சி அடைந்துள்ளது.
அமெரிக்க கப்பலைத் தாக்கிய ஹவுதி குழுவினர்
ஏமன் கடற்கரைக்கு அருகே உலவிக் கொண்டு இருந்த அமெரிக்க கப்பலை ஹவுதி போராளிகள் ஏவுகணைகள் மூலம் தாக்கி கடுமை யான சேதங்களை ஏற்படுத்தி உள்ளனர். ‘ஜிப்ரால்டர் ஈகிள்’ என்ற கப்பலில் இந்த தாக்கு தல் நடந்துள்ளது. 2 முதல் 3 ஏவுகணைகள் மூலம் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படு கிறது. இதில், கப்பலில் உள்ளவர்களுக்கு சிறிய அளவிலான காயங்கள் அல்லது குறிப்பிடத்தக்க சேதம் ஏற்பட்டு உள்ளது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தாக்கு தல் காரணமாக பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இதற்கு தக்க பதிலடி கொடுக்கப் படும் என்று வழக்கம்போல அமெரிக்கா கொக்கரித்துள்ளது.
ஹிஸ்புல்லா குழுவினர் இஸ்ரேலுக்குப் பதிலடி
லெபனானைச் சேந்த ஹிஸ்புல்லா இயக்கமும், இஸ்ரேல் மீது ராக்கெட்டுகள் மூலம் தாக்குதல் நடத்தி பதிலடி கொடுத்து வருகிறது. இதற்கு ஈரான் ஆதரவு அளிப்ப தாக கூறப்படும் நிலையில், “இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலுடன் ஈரானையும் தொடர்பு படுத்துகிறார்கள். அது தவறு. நாங்கள் இதில் பங்கேற்கவில்லை. ஆனால் இந்த தாக்குதலை பாராட்டுகிறோம். இஸ்ரேல் ஆட்சி மீதான தாக்குதலுக்கு திட்டமிட்டவர்களின் கைகளை முத்தமிடுகிறோம். இதை செய்தவர்கள் துணிச்சலானவர்கள். அவர்கள் செய்தது பெரிய சாதனை. இது மிகவும் வலிமையான செய்தி. இஸ்ரேல் நசுங்கிவிட்டது. இஸ்ரேல் பெரிய அடி வாங்கிவிட்டது. இஸ்ரேல் இனி முன்னேறவே முடியாது. இஸ்ரேல் எழுந்து வர முடியாத அளவிற்கு தாக்குதல் நடத்தி இருக்கிறோம்” என்று ஈரானின் தலைவர் அயதுல்லா அலி கமேனி பேட்டி அளித்துள்ளார்.
பிணங்களில் உறுப்புகளைத் திருடும் இஸ்ரேல்
இதனிடையே, இஸ்ரேல் ராணுவம் காசா பகுதியில் கொலை செய்த 80 பாலஸ்தீனர்களின் உடல் உறுப்புகளை திருடியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பல ஆண்டுகளாக கைது செய்து கொலை செய்யும் பாலஸ்தீனர்களின் உடல்களை குடும்பத்தினரின் அனுமதியின்றி உடற்கூராய்வு செய்து அவர்களது உடல் உறுப்புகளை மற்றும் தோல்களை இஸ்ரேல் திருடி வந்துள்ளது. இதை இஸ்ரேல் ராணுவமே 2009 ஆண்டு ஒப்புக் கொண்டுள்ளது என ‘தி கார்டியன்’ இதழ் செய்தி வெளியிட்டுள்ளது. ஸ்வீடிஷ் செய்தித்தாளும் இஸ்ரேல் பாலஸ்தீனர்களை கொன்று உடல் உறுப்பு களை திருடுவதாக செய்தி வெளியிட்டது. இதற்கு ஆவேசம் அடைந்த இஸ்ரேல் அரசு, ‘இது யூத வெறுப்புப் பிரச்சாரம்’ என கூப்பாடு போட்டு தன்னை பாதிக்கப்பட்ட நபராக காட்டிக் கொள்ள முயற்சித்தது. எனினும் பின்நாட்களில் தவிர்க்க இயலாமல் ஒப்புக்கொண்டது. உறுப்புதானம் தேவைப்படக்கூடிய மற்றும் பிளாஸ்டிக் சர்ஜரி செய்யும் இஸ்ரே லியர்களுக்கு பாலஸ்தீனர்களிடம் இருந்து திருடும் உறுப்புகளை இஸ்ரேல் பயன்படுத்தி வந்த செய்தி 2009-ஆம் ஆண்டு வெளியான ஒரு தொலைக்காட்சி ஆவணப்படத்தின் மூலம் பகிரங்கமாக அம்பலமானது. ஈரானின் அரசு நடத்தும் பிரஸ் டிவியும் இதை உறுதிபடுத்தியது. இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் அருகே அமைந்துள்ள அபு கபீர் தடயவியல் நிறு வனத்தின் முன்னாள் தலைவரான டாக்டர் யெஹுதா இந்த உறுப்பு திருட்டு குறித்து உண்மையை ஒப்புக்கொண்டு அளித்திருந்த பேட்டி மேலும் அதிர்ச்சியை கிளப்பியது குறிப்பிடத்தக்கது. இனி வரும் காலக்கட்டத்தில் இது போன்ற உறுப்புத் திருட்டு தவறுகள் நடக்காது என இஸ்ரேல் தெரிவித்திருந்த நிலையில் தற்போது வரை உறுப்பு திருட்டை இஸ்ரேல் இராணுவம் தொடர்வதை சமீபத்தில் 80 பாலஸ்தீனர்களின் உடல் உறுப்புகளை திருடிய சம்பவம் உறுதிப்படுத்தியுள்ளது. போருக்கு முன்பு மேற்குக் கரை மற்றும் காசா பகுதியிலிருந்து இஸ்ரேலியப் படை களால் கைது செய்யப்பட்ட இளைஞர்களின் உடல்கள் உறுப்பு திருடப்பட்டு குடும்பங்களுக்குத் அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.