பெய்ரூட்,செப். 24- லெபனானில் திங்கள் கிழமை யன்று காலை முதல் 12 போர் விமா னங்கள் மூலம் சுமார் 1,600 க்கும் மேற்பட்ட இடங்களில் இஸ்ரேல் ராணுவம் குண்டுவீசி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் உட்பட சுமார் 500 க்கும் அதிக மான அப்பாவி மக்களை கொடூர மாக இஸ்ரேல் படுகொலை செய்தது. 1600 க்கும் அதிகமான மக்கள் படுகாயமடைந்துள்ளனர் என லெபனான் சுகாதார அமைச் சகம் உறுதி செய்துள்ளது.
2006 ஆம் ஆண்டுக்கு பிறகு லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய மிகப்பெரிய தாக்குத லாக இந்த தாக்குதல் அமைந்துள் ளது.இந்த தாக்குதலில் பொது மக்களும் அவர்களது உடமை களுமே இஸ்ரேல் ராணுவத்தின் பிரதான இலக்குகளாக இருந்து ள்ளது. எனினும் ஹிஸ்புல்லா அமைப்பை மட்டுமே தாக்குவதாக இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு மழுப்பியுள்ளார்.
கடந்த வாரம் லெபனானில் பேஜர், வாக்கி டாக்கி மூலம் இஸ்ரேல் ராணுவம் நடத்திய பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து இந்த கொடூரமான தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் அரங்கேற்றியுள்ளது.
இதனைத் தொடர்ந்து லெப னானின் ஹிஸ்புல்லா அமைப்பும் நீண்டதூர ஏவுகணைகளைப் பய ன்படுத்தி இஸ்ரேலின் ஹபிபா துறைமுகம், தலைநகர் டெல் அவிவ் ஆகிய நகரங்கள் மீது தாக்குதல் நடத்தியது. இஸ்ரே லின் விமான ஓடுதளங்களையும், இஸ்ரேலின் வடக்கு எல்லையில் உள்ள ராணுவத்தளம், வெடி மருந்து தொழிற்சாலை ஆகிய வற்றைக் குறிவைத்தும் ஹிஸ் புல்லா அமைப்பு தாக்குதல் நடத்தியது. இஸ்ரேலின் விமான நிலைய ஓடுதளங்கள் பாதிப்படைந் துள்ள நிலையில் சைப்ரஸ் தீவை விமான படைத்தளமாக இஸ்ரேல் பயன்படுத்தி வருகிறது.
அமைதிக்கு அழைப்பு
இஸ்ரேல் - லெபனான் மோத லால் மத்தியக் கிழக்கு பகுதியில் தீவிரமான போர்ச் சூழல் ஏற் பட்டுள்ளது. இந்நிலையில், சர்வ தேச சமூகம் ஒன்றுபட்டு போர்ப் பதற்றத்தை குறைக்க வேண்டும்; மத்திய கிழக்கில் அமைதி மற்றும் உறுதித்தன்மை ஏற்பட சீனா தொடர்ந்து ஒத்துழைக்கும் என சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் லின் ஜியான் தெரிவித்துள்ளார். போர் விரிவாக்கம் மத்திய கிழக்கு நாடுகளை சீர்குலைத்து விடும் என ரஷ்யாவும் எச்சரித்துள்ளது.
பெரிய அளவில் போர் ஏற் பட்டால் லெபனான் மற்றொரு காசாவாக மாறிவிடும் என ஐநா பொதுச்செயலாளர் அன்டோனி யோ குட்டெரெஸ் எச்சரித்துள்ளார்.