கொழும்பு, ஜூலை 21- இலங்கையின் எட்டா வது ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்கே வியாழனன்று பதவியேற்றார். மக்கள் போராட்டம் நாளுக்கு நாள் அதிகரித்த தால், ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சே அண்மையில் ராஜினாமா செய்தார். இதையடுத்து அந்நாட்டின் இடைக்கால ஜனாதிபதி யாக பிரதமர் ரணில் விக்ரம சிங்கே பதவியேற்றார். இந்த நிலையில், இலங்கையில் இரண்டாவது முறையாக நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாக்கெ டுப்பு மூலம் புதன்கிழமை நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரம சிங்கே, டலஸ் அழகப் பெரும, அனுரா திசநாயக்க ஆகியோர் போட்டியிட்ட னர். அதில் 134 வாக்குகள் பெற்ற ரணில் விக்ரமசிங்கே வெற்றி பெற்றார். இதை யடுத்து, இலங்கையின் எட்டாவது ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்கே வியாழனன்று பொறுப் பேற்றார். இலங்கையின் தலைமை நீதிபதி ஜெயந்த ஜெயசூர்யா அவருக்கு பத விப்பிரமாணம் செய்துவைத் தார். இலங்கையில் ஜனாதி பதியை பொதுவாக மக்கள் தான் தேர்ந்தெடுப்பார்கள். ஜனாதிபதியின் பத விக்காலம் அதிகாரப்பூர்வ மாக நிறைவடைவதற்கு முன் னர் ஜனாதிபதி பதவி காலியானால் மட்டுமே ஜனாதிபதியை தேர்வு செய்யும் பொறுப்பு நாடாளுமன்ற உறுப்பினர் களுக்கு உண்டு.
இதற்கு முன்பு 1993-ஆம் ஆண்டு, தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் தந்தை யும் முன்னாள் ஜனாதிபதி யுமான ரணசிங்க பிரேமதாச படுகொலை செய்யப்பட்ட தைத் தொடர்ந்து அப்போ தைய பிரதமர் டிங்கிரி பண்டா விஜேதுங்க, போட்டி யின்றி நாடாளுமன்றத்தால் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கை பிரதமர் தினேஷ் குணவர்தன? ரணில் விக்ரம சிங்க, ராஜபக்சேவின் நீண்டகால விசுவாசியும் மூத்த அரசியல்வாதியுமான தினேஷ் குணவர்தனவை பிரதமராக நியமிப்பார் என்று எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி அலுவலகத் திற்கு நெருக்கமான வட்டா ரங்கள் தெரிவித்துள்ளது. இதற்கிடையில் வியாழ னன்று நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத் தைத் தொடர்ந்து, எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது ட்விட்டர் பதிவில், வியாழனன்று நடைபெற்ற கட்சித் தலை வர்கள் கூட்டத்தில் ரணில் விக்ரமசிங்கே-விடமிருந்து அன்பான மற்றும் வெளிப் படையான கருத்து பரி மாற்றம் வெளிப்பட்டது. துயரம் மற்றும் பேரழிவைத் தவிர்க்க ஆக்கப்பூர்வமான ஆதரவை எதிர்க்கட்சிகள் அளிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டேன். மேலும், அரசியல் சந்தர்ப் பவாதிகளுக்கு அமைச்சர் பதவிகளை வழங்கு வதற்குப் பதிலாக, நாட்டின் வளத்தை மேம்படுத்த வேண்டும். ஒருமித்த கருத்தைப் பெறுவதற்காக நாடாளுமன்றத்தில் குழு அமைப்பைப் பலப்படுத்த முன்மொழிந்தேன் என்றும் சஜித் பிரேமதாச கூறியுள் ளார்.