world

இலங்கையில் 4 லட்சம் பேர் பாதிப்பு; 14 பேர் பலி!

கொழும்பு, நவ.30- பெஞ்சால் புயல் காரண மாக, தமிழகம் மட்டுமன்றி இலங்கையிலும் கனமழை  கொட்டி தீர்த்து வருகிறது.  அங்குள்ள 25 மாவட்டங்க ளில் 24 மாவட்டங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. மழை வெள்ளத்தால் 4 லட்சத்து 41 ஆயிரத்து 373 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 38 ஆயிரத்து 594 பேர் நிவா ரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கண்டி,  நுவரெலியா, கேகாலை  ஆகிய பகுதிகளில் மின்சா ரம் துண்டிக்கப்பட்டுள்ளது. கொழும்பு, கண்டி, குரு நாகல், மாத்தளை உள் ளிட்ட பகுதிகளில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. கனமழை - வெள்ளத்திற்கு இதுவரை 14 பேர் பலியாகியுள்ளனர்.