இந்தோனேசியாவின் கோரண்டலோ மாகாணத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டின் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக நில அதிர்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில்,
நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 6.1 அலகுகளாகப் பதிவாகியுள்ளது. நிலநடுக்க மையப்பகுதி கோரண்டலோ நகருக்கு தென்மேற்கே 77 கி.மீ தொலைவில் கடற்பரப்பிற்கு அடியில் 132 கி.மீ ஆழத்தில் பதிவானது.
சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் குடியிருப்பாளர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர்.கடலில் அலைகள் அதிகமாக இருந்தது எனினும் சுனாமி எச்சரிக்கை எதுவும் வெளியிடவில்லை.
பேரிடர் மேலாண்மை அமைப்பின் தலைவரான செம்பிரிங் ஹென்றி கூறுகையில், நில அதிர்வுகள் குறிப்பிடத்தக்க அளவில் உணரப்பட்டதாகக் கூறினார். இதனால், மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். இந்த நில அதிர்வால் பொருள் சேதமோ, உயிரிழப்போ ஏதும் ஏற்படவில்லை என கூறினார்.