இந்தோனேசியாவில் சட்டவிரோத மாக செயல்பட்ட சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 3 பெண்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்தோனேசியாவின் சுலவேசி மாகாணத்தில் செயல்பட்டு வந்த சட்ட விரோத தங்க சுரங்கத்தில் நேற்று திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவின் போது அந்த சுரங்கத்தில் பணியில் இருந்த 23 பேரும் மண்ணில் புதைந்ததாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மீட்பு குழுவினர் 15 பேரை உயிருடன் மீட்டுள்ளனர். மேலும் 3 பெண்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 5 பேரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.