world

img

ஹமாஸ் ஏற்றுக் கொண்டாலும் போரை நிறுத்த மாட்டோம் - நேதன்யாகு அராஜகம்

டெல்அவிவ்,ஜூன் 24- போர் நிறுத்த தீர்மானத்தை ஹமாஸ் ஏற்றுக் கொண்டாலும் நாங்கள் போர் நிறுத்தத்தை மேற் கொள்ள மாட்டோம் என இஸ்ரேல் ஜனாதிபதி நேதன் யாகு அராஜகமாக அறிவித்துள்ளார். ஐ.நா. பாதுகாப்பு அவையில் ஆறு வாரங்களுக்கு போரை இடைநிறுத்தம் செய்வது,  காசா மற்றும் இஸ்ரேல் சிறையில் உள்ள கைதிகளை  விடுவிப்பது, பேச்சுவார்த்தைகள் மூலம் போர் நிறுத்தத்தை நிரந்தர மாக்குவது என முன்மொழிவு கொண்டுவரப்பட்டு நிறை வேற்றப்பட்டது. இந்த போர் நிறுத்த முடிவை ஹமாஸ் அமைப்பு ஏற்றுக்கொண்டது.  இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பிறகும் இஸ்ரேல் ராணுவம் மிகக் கொடூரமான தாக்குதல்களை அரங் கேற்றி வந்ததுடன்  ஹமாஸ் அமைப்பை முழுமையாக அழிக்கும் வரை நாங்கள் போரை தொடர்வோம் என இஸ்ரேல் அறிவித்திருந்தது.  இந்நிலையில் ரஃபா எல்லையில் நடத்தப்பட்டு வரும் தாக்குதல் கிட்டத்தட்ட முடிந்து விட்டது. அந்த தாக்கு தல் முழுமையடைந்தாலும், ஹமாஸ் போர் நிறுத்தத்தை ஏற்றுக்கொண்டது என்பதற்காகவும் நாங்கள் தாக்கு தலை நிறுத்த மாட்டோம் என இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு அறிவித்துள்ளார்.