ஏதென்ஸ், ஜூலை 25- இத்தாலியில் தொழிற்சங்கம் அமைத்திருப் பது, போராடுவது, முற்றுகையிடுவது, தொழி லாளர்களைத் திரட்டுவது ஆகியவற்றை குற்றச்செயல்களாக மாற்றும் முயற்சிகள் நடந்து வருகின்றன. இத்தாலியின் முக்கியமான தொழிற்சங்கங் களில் யுஎஸ்பி மற்றும் சி கோபாஸ் ஆகிய இரண்டு சங்கங்களுக்கும் எதிரான நடவடிக்கை கள் தொடங்கியுள்ளன. இந்த சங்கங்களுக்கு எதிராக 350 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரி கை தயாராகியிருக்கிறது. அவர்கள் சரக்குப் போக்குவரத்துத் துறையில் முற்றுகையிடும் வேலை நிறுத்தங்கள், போராட்டங்கள் மற்றும் தொழிலாளர்களைத் திரட்டுதல் ஆகிய ‘‘குற்றங்கள்’’ செய்ததாகக் குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளன. இவற்றின் அடிப்படையில், சங்க அலுவலகங்கள் மற்றும் தலைவர்களின் வீடுகளில் சோதனைகள் நடத்தப்படுகின்றன. பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளில் விலைவாசி உயர்வு மற்றும் முடக்கப்பட்ட ஊதியம் ஆகியவற்றிற்கு எதிராகத் தொழிலாளர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
முதலாளிகளும், அரசுகளும் இந்தப் போராட்டங்களைத் தடுக்கத் தங்களால் ஆன முயற்சிகளைச் செய்கிறார்கள். தொழிலாளர்களோடு அனை த்துப் பகுதி மக்களும் போராட்டத்தில் குதித்துள் ளனர். இதனால் போராட்டங்களையே குற்றங்களாகச் சித்தரிக்கும் வேலையைத் துவங்கியிருக்கிறார்கள். தொழிலாளர்களின் கோபம் அதிகரித்து, ஒன்றுபட்ட போராட்டங்களை தொழிற்சங்கங் கள் முன்னெடுத்து வருவதால், இத்தாலி யின் சரக்குப் போக்குவரத்து நிறுவனங் களின் முதலாளிகள் அரசு இயந்திரத்தைப் பயன்படுத்தி சங்கங்களை முடக்க முயற்சிக் கிறார்கள். அப்த் எல் சலாம் என்ற தொழிலாளி யின் கொலையை தொழிற்சங்கங்கள் மீது சுமத்த நடக்கும் சதிவேலையும் நடக்கிறது. இந்தக் கொலையில் தொழிற்சங்கத் தலைவர்கள் யாரும் ஈடுபட்டதற்கான சான்றுகள் இதுவரையில் கிடைக்கவில்லை. ஆனால், சங்கங்களுக்கு எதிரான பிரச்சாரம் மட்டும் நடைபெறுகிறது. தொழிலாளர்களின் நலன்களைக் காவு கொடுக்கும் புதிய சட்டங்களுக்கு எதிரான 24 மணிநேர வேலைநிறுத்தம் நடந்துள்ளது. ஒட்டுமொத்த சரக்குப் போக்குவரத்துத் துறையே முடங்கும் அளவுக்கு தொழிலாளர்களின் ஒற்றுமை இருப்பதை வேலை நிறுத்தத்தின் வெற்றி காட்டுகிறது. மிரட்டல்களால் தொழிலாளர்களை ஒடுக்கி விட முடியாது என்றும், அவர்களின் போராட்டம் அவற்றை உடைத்தெறியும் என்றும் தொழிற்சங்கங்கள் கூறியுள்ளன.