world

img

தீக்கதிர் உலக செய்திகள்

வங்கதேசத்தில் தேடுதல் வேட்டை : 1000 பேர் கைது 

வங்கதேச ராணுவம் “ஆபரேஷன் டெவில் ஹண்ட்” என்ற பெயரில் தேடுதல் வேட்டை நடத்தி சுமார் 1,308 பேரை கைது செய்துள்ளது. முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்ட பிறகு வன்முறைச் சூழல் கட்டுப்படுத்தப்படவில்லை. அரசியல் பழி வாங்கல் நடவடிக்கைக்கே முக்கியத்துவம் கொடுக்கிறது என விமர்சனங்கள் எழுந்தன. கடந்த சில நாட்களாக அமைதியின்மை மிக மோசமான நிலையில், வன்முறையை கட்டுப் படுத்த கைது நடவடிக்கையை இடைக்கால அரசு துவங்கியுள்ளது.

நாணயங்கள் உற்பத்தியை நிறுத்த டிரம்ப் உத்தரவு

அமெரிக்காவில் சில்லரை நாணயங்கள் உற்பத்தி செய்வதை நிறுத்த உத்தரவிட் டுள்ளார் டொனால்டு டிரம்ப்.  சில்லரை நாண யங்களை உற்பத்தி செய்ய செலவு அதிகரித்து வருகின்றது என காரணம் காட்டி கருவூலத் துறைக்கு இந்த  உத்தரவை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா பல ஆண்டுகாலமாக நாணயங்களை அச்சிட்டு வருகின்றது. இதற்காக 2 சென்ட்களுக்கு மேல் செலவாகின்றது இது மிகவும் வீணானது! என  டிரம்ப் தனது உண்மை சமூக தளத்தில் தெரிவித்துள்ளார்.

கனடாவை ஆக்கிரமிப்பதில்  டிரம்ப் தீவிரம் 

கனடாவை ஆக்கிரமிப்பதில் தீவிரம் காட்டுவதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு  டொனால்டு டிரம்ப் கொடுத்த பேட்டியில், கனடாவை  ஆக்கிர மிக்க  அமெரிக்கா முயற்சிப்பதாக கனடா பிரதமர் ட்ரூடோ தெரிவித்துள்ளாரே  என கேள்வி எழுப் பப்பட்டது. அதற்கு  அமெரிக்காவின் 51 ஆவது மாநிலமாக கனடாவை மாற்ற வேண்டும் என்ப தில் தான் தீவிரமாக இருக்கின்றேன் என  ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் உறுதியாக கூறியுள்ளார்.

கர்ப்பிணியை படுகொலை செய்த இஸ்ரேல் ராணுவம் 

இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பாலஸ் தீன மேற்கு கரையில் 8 மாத கர்ப்பிணிப் பெண்ணை இஸ்ரேல் ராணுவம் கொடூரமாக சுட்டுப்படுகொலை செய்துள்ளது. இஸ்ரேல் ராணு வம் மேற்கு கரையில் “அயர்ன் வால்” என்ற பெய ரில் தேடுதல்வேட்டை நடத்தி  நூற்றுக்கணக்கான  பாலஸ்தீனர்களை கைது செய்து சிறையில் அடைத்து சித்ரவதை செய்து வருகின்றது. சிலரை சுட்டுப்படுகொலை செய்துள்ளது. நூர் ஷம்ஸ் அகதிகள் முகாமில் நடத்தப்பட்ட தாக்குதலில் 21 வயதுடைய பெண்ணும் 23 வயதுடைய 8 மாத கர்ப்பிணியும் படுகொலைசெய்யப்பட்டனர்.

டிரம்ப்பை விமர்சித்த  ஜெர்மன் அதிபர்

காசாவில் இருந்து பாலஸ்தீனர்களை துரத்த வேண்டும் என டிரம்ப் முன்வைத்துள்ள திட்டத்தை   ஜெர்மன் அதிபர் ஓலாஃப் சோல்ஸ் விமர்சித்துள்ளார். மேலும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பின்  இந்த திட்டம் “ஒரு ஊழல்” என்றும் குற்றம் சாட்டியுள்ளார். பிப்ரவரி 23 அன்று அந்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் நடைபெற்ற ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் மத்திய கிழக்கு பிரச்சனை பற்றி பேசிய போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.மேலும் பாலஸ்தீனர்களை எகிப்து உள்ளிட்ட நாடுகளுக்கு துரத்தக்கூடாது எனவும் அவர் தெரிவித்தார்.